அதிகாரம் 5
2 ஆனால், யெருசலேம் நகரம் முழுமையும் நாற்பது நாட்களாகப் பொற்சரிகை ஆடை அணிந்து, ஈட்டிகளைக் கையில் ஏந்தியவர்களாய்க் குதிரை வீரர் போலக் குதிரைகளின் மேல் விண்ணில் ஓடிக்கொண்டிருந்த மனிதர்கள் காணப்பட்டார்கள்.
3 குதிரைகள் வரிசைவரிசையாய் நின்றன@ ஒன்றையொன்று எதிர்த்து ஓடின@ கைகலந்து சண்டைகள் நடந்தன@ கேடயங்கள் அசைந்தன@ தலைச் சீராய் அணிந்து, உருவிய வாளுடன் பலர் தோன்றினார்கள். எறியப்பட்ட அம்புகளும், ஒளிரும் பொன்னாயுதங்களும், எல்லாவித இரும்புக் கவசங்களும் காணப்பட்டன.
4 ஆதலால், எல்லாரும் இவ்வசதியங்கள் நன்மையாக மாறவேண்டுமென்று மன்றாடினார்கள்.
5 ஆனால், அந்தியோக்கஸ் இறந்தானென்று ஒரு பொய் வதந்தி எங்கும் பரவியபோது, யாசோன் ஆயிரம் பேருக்குக் குறையாமல் கூட்டி வந்து நகரைத் திடீரென்று தாக்கினான். நகரத்தார் மதில்களுக்கு ஓடினார்கள், கடைசியில் நகரம் பிடிபட்டது. மெனேலாவுஸ் கோட்டைக்குள் ஓடிப்போனான்.
6 யாசோன் தன் நகரத்தாரைக் காப்பாற்ற நினையாமல் யாவரையும் கொலை செய்தான். உறவுமுறையாருக்கு எதிராய்க் கொண்ட வெற்றி பெரும் தீமை என்று அவன எண்ணவில்லை@ தன் நகரத்தாரையல்ல, பகைவரையே வெற்றி கொள்வதாக அவன் எண்ணினான்.
7 ஆயினும், அவன் அதிகாரத்தை அடையவில்லை@ தன் தீய எண்ணங்களின் முடிவாக அவமானத்தையே அடைந்தான்@ திரும்பவும் அம்மோனித்தர் நாட்டிற்கு ஓட்டம் பிடித்தான்
8 கடைசியாய், அராபிய நாட்டுக் கொடுங்கோல் அரசனான அரேதாவால் பிடிபட்டுக் கொல்லப்படப் போகையில், ஒரு நகரினின்று மற்றொரு நகர் ஓடி எல்லாராலும் பகைக்கப்பட்டு, சட்டங்களை மீறுகிறவன் போல வெறுக்கப்பட்டு, தன் நாட்டினுடையவும் தன் நகரத்தாருடையவும் பகைவனாய் எகிப்து நாட்டிற்குத் துரத்தப்பட்டான்.
9 இவ்வாறு பலரை அவர்கள் நாட்டினின்று துரத்திய பின், உறவு முறை கொண்டாடி வாழலாமென்று லாசேதேமோனியாவில் அடைக்கலம் புகுந்த அவன் அன்னிய நாட்டிலே மாண்டான்.
10 அடக்கம் செய்யாமல் பலரை எறிந்தவன், அழுவாரில்லாமல், அடக்கமில்லாமல் எறியப்பட்டான்@ அன்னிய நாட்டிலேயே அடக்கமுமில்லாமல், தன் நாட்டிலே கல்லறையும் அற்றுப் போனான்.
11 இவ்வாறு இருக்கையில், யூத மக்கள் சமாதான உடன்படிக்கையை விட்டு விடுவார்களென்று அரசன் ஐயமுற்றான். ஆதலால், மிகவும் கோபம் கொண்டு எகிப்தினின்று புறப்பட்டு வந்து நகரத்தைப் படைகளைக் கொண்டு பிடித்தான்.
12 ஒருவரையும் விடாமல், காண்பவர்கள் எல்லாரையும் கொல்லவும், வீடுகளில் நுழைந்து அனைவரையும் அழித்தொழிக்கவும் தன் வீரருக்குக் கட்டளையிட்டான்.
13 ஆதலால், இளைஞரும் முதியோரும் வெட்டுண்டார்கள்@ பெண்களும் குழந்தைகளும் அழிந்தார்கள்@ கன்னியரும் சிறுவரும் கொலையுண்டார்கள்.
14 ஆக, மூன்று நாட்களுக்குள்ளாக எண்பத்து மூவாயிரம் பேர் கொலையுண்டார்கள்@ நாற்பதினாயிரம் பேர் சிறைப்படுத்தப் பட்டார்கள்@ அத்தொகைக்குக் குறைவில்லாமல் பலர் விற்கப்பட்டார்கள்.
15 இதுவும் போதாமல், கட்டளைகளுக்கும் தன் நாட்டிற்கும் துரோகம் செய்த மெனேலாவுஸ் கூட்டிச் செல்ல, பூவுலகெங்கும் புனித மிக்க கடவுள் ஆலயத்துள்ளும் அவன் புகத்துணிந்தான்.
16 வேறு அரசர்களாலும் நகரங்களாலும் அவ்விடத்தின் அலங்காரத்திற்காகவும் மகிமைக்காகவும் கொடுக்கப்பட்ட புனித பாத்திரங்களைக் கறைபடிந்த தன் கைகளால் மரியாதையின்றி எடுத்தான்@ அவற்றைத் தீட்டுப் படுத்தினான்
17 அந்தியோக்கஸ் அறிவு கெட்டுப் போனமையால், நகரத்தாருடைய பாவங்களின் பொருட்டுக் கடவுள் சிறிது காலம் கோபம் கொண்டாரென்று எண்ணவில்லை@ அதனால் தான் அவ்விடத்துக்கும் அவமானம் உண்டானதென்று நினைக்கவில்லை.
18 ஏனென்றால், அவர்கள் பற்பல அக்கிரமங்களைச் செய்யாதிருந்திருந்தால், செல்வத்தைக் கொள்ளையடிக்கச் செலேயுக்கசால் அனுப்பப்பட்ட எலியோதோருசைப் போல, இவனும் வந்தவுடனே தன் செருக்கை முன்னிட்டு அடிப்பட்டுத் துரத்தப்பட்டும் இருப்பான்.
19 ஆனால், உண்மையாகவே இடத்தை முன்னிட்டன்று- ஆனால் மக்களை முன்னிட்டுத் தான் இடத்துக்கும் அவமானம் வந்ததென்று அவன் நினைக்கவில்லை.
20 ஆதலால், மக்களுடைய தண்டனைக்கு இடமும் பங்காளியானது@ பிறகு சம்பாவனைகளுக்கும் பங்காளியாகும். எல்லாம் வல்ல கடவுளுடைய கோபத்தினால் அது கைவிடப் பட்டது@ திரும்பவும் உன்னத ஆண்டவருடைய மன்னிப்பினால் மகிமையோடு உயர்த்தப்படும்.
21 கடவுள் ஆலயத்திலிருந்து அந்தியோக்கஸ் ஆயிரத்தெண்ணுறு தாலேந்துகள் எடுத்துக் கொண்டு விரைவாய் அந்தியோக்கியாவுக்குத் திரும்பிப் போனான்@ அவனது மனம் செருக்குற்றதால் அகந்தை கொண்டு தரையில் கப்பற் பயணம் செய்யவும், கடலில் நடந்து செல்லவும் முடியும் என்று எண்ணினான்.
22 மக்களை வதைப்பதற்கு அவன் தலைவர்களை ஏற்படுத்தினான். தன்னை நியமித்தவனை விடக் கொடுமையுள்ளவனும் பிரிஜிய இனத்தானுமான பிலிப்பு என்பவன் யெருசலேமில் தலைவனானான்.
23 காரிசீம் மக்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் அதிகத் துன்பம் கொடுக்க அந்திரோனிக்கஸ் என்பவனையும் மெனேலாவுசையும் நியமித்தான்.
24 யூதர் மீது இன்னும் தனக்குக் கோபம் அதிகரித்தமையால் மிகக் கொடியவனான அப்பொல்லோனியுஸ் என்ற தலைவனை இருபத்தீராயிரம் படைவீரரோடு அனுப்பி, வயது வந்தவர்களையெல்லாம் கொல்லவும், பெண்களையும், இளைஞரையும் விற்றுவிடவும் கட்டளையிட்டான்.
25 அவன் யெருசலேம் வந்து, சமாதானமாய் வந்தவன் போலக் காட்டிக் கொண்டு, புனித ஓய்வுநாள் வரை அமைதியாய் இருந்தான். அப்போது, யூதர்கள் இளைப்பாறியிருக்கையில் தன்னவர்கள் ஆயுதங்கள் எடுக்கக் கட்டளையிட்டான்.
26 வேடிக்கை பார்க்க வந்தவர்கள் எல்லாரையும் கொன்றான்@ ஆயுதம் ஏந்தியவர்களோடு நகரம் முழுமையும் சுற்றித் திரிந்து திரளான மக்களைக் கொலை செய்தான்.
27 ஒன்பது பேருடன் யூதாஸ் மக்கபேயுஸ் பாலைவனத்துக்குச் சென்றிருந்தார். அவ்விடத்தில் அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் (நகரத்தில் இருந்து) தங்களையே தீட்டுப்படுத்திக் கொள்ளாதபடிக்கு, மலைகளில் மிருகங்கள் நடுவே சுற்றித் திரிந்து, கீரையை உணவாகத் தின்று தங்கியிருந்தார்கள்.