அதிகாரம் 11
2 எண்பதாயிரம் காலாட் படைகளையும், எல்லாக் குதிரைப் படைகளையும் சேர்த்துக் கொண்டு யூதரை எதிர்க்க வந்தான்@ அவர்களுடைய நகரைப் பிடித்து, அதைப் புறவினத்தாருடைய உறைவிடமாக்குவதென்றும்,
3 புறவினத்தாருடைய கோயில்களைப்போலக் கடவுளின் ஆலயத்தையும் பணம் திரட்டுவதற்காக வைத்திருப்பதென்றும், ஆண்டு தோறும் குருத்துவப் பதவியை விற்பதென்றும் எண்ணி வந்தான்.
4 கடவுளுடைய வல்லமையை அவன் ஒருபோதும் நினைத்தவனல்லன். ஆனால், தன் மனத்தில் அகந்தை கொண்டு, திரளான காலாட்படை வீரரிலும், ஆயிரக்கணக்கான குதிரை வீரரிலும், எண்பது யானைகளிலும் தன் நம்பிக்கையை வைத்திருந்தான்.
5 அவன் யூதேயா நாட்டில் புகுந்து, யெருசலேமுக்கு ஐந்து மைல் தூரத்தில் குறுகிய பள்ளத்தாக்கில் இருந்த பெத்சூரா நகரை நெருங்கி, அந்தக் கோட்டையைத் தாக்கினான்.
6 மக்கபேயுசும் அவருடன் இருந்தவர்களும் கோட்டைகள் தாக்கப்படுவதை அறிந்து, அழுது கண்ணீர் சிந்நி, இஸ்ராயேலின் மீட்புக்காகத் தம் நல்ல தூதரை அனுப்பும் படியாக எல்லாரும் சேர்ந்து ஆண்டவரை மன்றாடினார்கள்.
7 மக்கபேயுஸ் தாமே முதலில் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, மற்றவர்களும் தம்முடன் ஆபத்துக்குத் துணியவும், தங்கள் சகோதரருக்கு உதவி புரியவும் தூண்டினார்.
8 அவர்களும் அவரைப்போலத் தயக்கமின்றி நடந்து போக, வெண்ணாடை அணிந்து பொன்னாயுதங்களுடன் ஈட்டியை ஓங்கிக் கொண்டு யெருசலேமில் தங்களுக்கு முன் சென்ற ஒரு குதிரை வீரன் காணப்பட்டான்.
9 அப்போது எல்லாரும் இரக்கமுள்ள ஆண்டவரைப் போற்றி மனத்திடம் கொண்டார்கள்@ மனிதரை மட்டுமல்ல, கொடிய மிருகங்களையும் இரும்புச் சுவர்களையும் துளைத்து (எதிர்க்கத்) துணிந்தார்கள்.
10 விண்ணினின்று தங்களுக்கு உதவி செய்பவரும், தங்கள் மேல் இரக்கம் கொண்டவருமான ஆண்டவர் தங்களோடு இருந்தபடியால் மிகத் துணிவுடன் போனார்கள்.
11 சிங்கங்களைப் போலப் பகைவர் மேல் வேகமாய்ப் பாய்ந்து, அவர்கள் காலாட்களில் பதினோராயிரம் பேர்களையும், குதிரை வீரரில் ஆயிரத்தறுநூறு பேர்களையும் விழத்தாட்டினார்கள்.
12 எல்லாரும் ஓட்டம் பிடிக்கும் படி செய்தார்கள். அவர்களில் பலர் காயப்பட்ட ஆயுதமற்றவராய் ஓடினார்கள். லிசியாசோ வெகு வெட்கத்தோடு ஓடித் தப்பித்துக் கொண்டான்.
13 ஆனால், அவன் அறிவுள்ளவனானதால், தனக்கு நேரிட்ட குறையை நினைத்து, எல்லாம் வல்ல கடவுளின் உதவியை நம்பின எபிரேயரைத் தான் வெல்ல முடியாது என்று கண்டு பிடித்து, அவர்களிடம் தூதர்களை அனுப்பி,
14 நியாயமானவற்றிற்கெல்லாம் தான் இணங்குவதாகவும், அரசனை அவர்களின் நண்பனாக்க வற்புறுத்துவதாகவும் வாக்குறுதி செய்தான்.
15 பொதுநன்மையை நாடி, லிசியாசின் வேண்டுதல்களுக்கு மக்கபேயுஸ் இசைந்தார். யூதரைப் பற்றி லிசியாசுக்கு மக்கபேயுஸ் எழுதின யாவையும் அரசன் நிறைவேற்றினான்.
16 ஏனென்றால், இவ்விதம் லிசியாஸ் யூதருக்குக் கடிதம் எழுதினான்: லிசியாஸ் யூதமக்களுக்கு வாழ்த்துகள் கூறுகிறேன்.
17 உங்களால் அனுப்பப்பட்ட அருளப்பனும் அபேசலோமும் கடிதத்தைக் கொடுத்து, அதில் அடங்கியவைகளை நான் நிறைவேற்றும்படி கேட்டுக்கொண்டார்கள்.
18 அரசருக்கு அறிவிக்கக் கூடுமானதெல்லாம் தெரிவித்தேன். அவர் தம்மால் கூடுமானவைகளை அளித்தார்.
19 ஆதலால், நீங்கள் உடன்படிக்கைகளில் நம்பிக்கை வைத்திருந்தால், இனி மேல் நான் உங்களுடைய நன்மைக்காகப் பாடுபடுவேன்.
20 மற்றக் காரியங்களைப் பற்றியோ, அவர்களிடமும் என்னால் அனுப்பப் பட்டிருக்கிறவர்களிடமும் வார்த்தை மூலமாய்ச் சொல்லி, உங்களிடம் பேசும்படி உத்தரவு இட்டிருக்கிறேன்.
21 உங்கள் நலம் நாடுகிறேன். நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு, தியோஸ்கோர் மாதம், இருபத்து நான்காம் நாள் (கொடுக்கப்பட்டது).
22 அரசனுடைய கடிதம் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது: அந்தியோக்கஸ் அரசர் சகோதரன் லிசியாசுக்கு வாழ்த்துகள் கூறுகிறோம்@
23 நம் தந்தை தேவர்களிடம் சேர்ந்த பிறகு, நமது அரசாட்சிக்கு உட்பட்டவர்களைக் கலகமில்லாமல் நடத்தவும், அவர்களுடைய காரியங்களில் கவலை எடுத்துக் கொள்ளவும் விரும்புகிறோம்.
24 யூதர் நம் தந்தை காலத்தில் கிரேக்கருடைய வழக்கத்துக்கு மாற்றப்பட இசையாமல், தங்கள் வழக்கங்களையே கைக்கொள்ள விரும்புகிறார்களென்றும், ஆதலால் தங்கள் உரிமைகள் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டுமென்று மன்றாடுகிறார்களென்றும் கேள்விப்பட்டோம்.
25 இவ்வினத்தாரும் சமாதானமாய் இருக்க நாம் விரும்பி, தீர்மானித்து, தங்கள் முன்னோருடைய வழக்கப் படியே அவர்கள் நடப்பதற்கு அவர்களுடைய கடவுள் ஆலயத்தை அவர்களுக்குத் திரும்பக் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.
26 அவர்கள் நம்முடைய முடிவை அறிந்து மகிழ்வுடன் இருக்கவும், தங்கள் நன்மையைக் கவனிக்கவும் நீ அவர்களிடம் தூதர்களை அனுப்பி உதவி செய்வது நலம்
27 யூதருக்கு அரசன் எழுதியிருந்த கடிதமாவது: அந்தியோக்கஸ் அரசர் யூத சங்கத்துக்கும் மற்ற யூதருக்கும் வாழ்த்துகள்.
28 நீங்கள் நலமுடன் இருப்பதையே நாம் விரும்புகிறோம். நாமும் நலமுடன் இருக்கிறோம்.
29 நம்மிடம் இருக்கும் உங்கள் இனத்தவருடன் நீங்கள் வந்து சேர விரும்புவதாக மெனேலாவுஸ் நம்மிடம் தெரிவித்தான்.
30 சாந்திக்கஸ் மாதம் முப்பதாம் நாள் வரை திரும்பி வருகிறவர்களுக்கு நாம் பாதுகாப்பும் உதவியும் வழங்குகிறோம்.
31 யூதர்கள் முன்போலத் தங்கள் விருப்பப்படியே உண்ணவும், கட்டளைகளைக் கடைபிடிக்கவும் உத்தரவளிக்கிறோம். அறியாமையால் ஒருவன் செய்த யாதொன்றிற்காகவும் எவனும் அவனை எவ்விதத்திலேனும் தொந்தரவுசெய்ய மாட்டான்.
32 உங்களிடம் பேசும்படி மெனேலாவுசை அனுப்பியிருக்கிறோம்.
33 உங்கள் நலம் நாடுகிறோம். நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு, சாந்திக்கஸ் மாதம், பதினைந்தாம் நாள் (கொடுக்கப்பட்டது ).
34 உரோமையரும் பின்வருமாறு எழுதியனுப்பினார்கள்: உரோமையருடைய பிரதிநிதிகளாகிய குயிந்துஸ் மேம்மியுசும், தித்துஸ் மனிலியுசும், யூத மக்களுக்கு வாழ்த்துகள்.
35 அரசருடைய உறவினனாகிய லிசியாஸ் உங்களுக்குக் கொடுத்தவைகளை நாங்களும் கொடுக்கிறோம்.
36 அரசரிடம் அறிவிக்க அவன் தீர்மானித்தவைகளை உங்களுக்குள்ளாக விரைவில் யோசித்து, நாங்களும் உங்களுக்கு வேண்டிய முறையிலேயே தீர்மானிக்க உடனே யாரையேனும் அனுப்புங்கள். ஏனென்றால், நாங்களும் அந்தியோக்கியா போகிறோம்.
37 ஆகையால், உங்கள் கருத்தை நாங்களும் அறிந்து கொள்ள உடனே பதில் எழுதுங்கள்.
38 உங்கள் நலம் நாடுகிறோம். நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு, சாந்திக்கஸ் மாதம், பதினைந்தாம் நாள் (கொடுக்கப்பட்டது ).