மொகஞ்சாதாரோ, ஹரப்பா, காலிபங்கன், லோத்தல், ரூபார் போன்ற நகரங்களைச் சுற்றி கண்டெடுக்கப்பட்டுள்ள கல்லறைகள் ஹரப்பா மச்களின் இறந்தோரைப் புதைக்கும் வழக்கம் குறித்து அறிய உதவுகின்றன. மொகஞ்சாதாரோவில் இறந்தோரை புதைக்கும் வழக்கமும், எரித்தபின்னர் எலும்புகளை புதைக்கும் வழக்கமும் வழக்கிலிருந்தன. லோத்தல் நகரில் புதைகுழியைச் சுற்றி செங்கற்கள் அடுக்கப்பட்டுள்ளன. ஹரப்பா நகரில் மரத்தாலான சவப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜோடியாகவும் மட்பாண்டத்திற்குள் வைத்தும் இறந்தோரை புதைத்ததற்கான சான்றுகளும் லோத்தலில் கிடைத்துள்ளன. 'சதி' என்ற உடன்கட்டையேறும் வழக்கம் நிலவியதற்கான தெளிவான சான்றுகள் இல்லை.
ஹரப்பா பண்பாட்டின் அழிவு
ஹரப்பா பண்பாட்டின் அழிவு குறித்தும் அதற்கான சான்றுகள் குறித்தும் அறிஞர்களுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லை. பொதுவாக பல்வேறு கருத்துக்கள் முன்னவக்கப்படுகின்றன, வெள்ளப் பெருக்கு, நதிகள் வறண்டுபோடுதல், விளைநிலம் தனது வளத்தை இழத்தல், அவ்வப்போது ஏற்படும் நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஹரப்பா நகரங்களின் அழிவுக்கு காரணங்களாக இருந்திருக்கக்கூடும். ஆரியர்களின் படையெடுப்பு ஹரப்பா நாகரிகத்திற்கு கடைசி மணியை ஒலித்தது என்பது ஒரு சில அறிஞர்களின் கருத்தாகும். கோட்டைகள் பல அழிக்கப்பட்டது குறித்து ரிக்வேதம் குறிப்பிடுகிறது. மேலும், மொகஞ்சாதோராவில் கண்டெடுக்கப் பட்டுள்ள மனித எலும்புக்குவியல் அந்நகரம் அயலவரின் படையெடுப்புக்கு ஆளானதை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஆரியர்களிடம் வலிமைமிக்க ஆயுதங்களும், வேகமாக செல்லக்கூடிப குதிரைகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், அவர்கள் சிந்து வெளிப்பகுதியில் தங்களது ஆதிக்கத்தை எளிதாக ஏற்படுத்தியிருக்கக் கூடும்.