ஹரப்பா எழுத்து வடிவம் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. 400 முதல் 600 வரையிலான வடிவங்கள் இருப்பினும் அவற்றில் 46 அல்ல து 60 மட்டுமே அடிப்படையாக விளங்குகின்றன. எஞ்சியவை அவற்றின் மாற்றுவடிவங்களே. ஹரப்பா எழுத்துக்கள் பொதுவாக வலமிருந்து இடமாகவே எழுதப்பட்டுள்ளன. ஒருசில முத்திரைகளில் முதல் வரி வலமிருந்து இடமாகவும், அடுத்தவரி இடமிருந்து வலமாகவும் மாறிமாறி எழுதப்பட்டுள்ளன. ஸ்கான்டிநேவியவைச் சேர்ந்த பார்போலா மற்றும் அவரது உடன் பணியாற்றும் அறிஞர்களும்
ஹரப்பா எழுத்து வடிவம்
ஹரப்பா மக்களின் மொழி திராவிடமொழியே என்று முடிவு செய்துள்ளனர். சோவியத் அறிஞர் சிலரும் இக்கருத்தை ஏற்கின்றனர். வேறுசில அறிஞர்கள் ஹரப்பா எழுத்துக்களை பிராமி எழுத்துவகையுடன் தொடர்புப்படுத்துகின்றனர். ஹரப்பா எழுத்து பற்றிய புதிர் இன்னும் அவிழ்க்கப்படவில்னல,
ஹரப்பா எழுத்து முழுவதும் படித்தறியப்படும்போது அப்பண்பாட்டின் சிறப்புகள் முழுமையாக வெளிவரும் என்பதில் ஐயமில்லை.
சமயம்
கடவுள் பசுபதி
முத்திரைகள், சுடுமண் உருவங்கள் மற்றும் செப்புவில்லைகள் போன்ற சான்றுகளிளிருந்து ஹரப்பா மக்களின் சமய வாழ்க்கை குறித்து அறியமுடிகிறது. அவர்களது முக்கிய ஆண் கடவுள் பசுபதி (முற்காலத்திய சிவன்). தியானவடிவில் அமர்ந்திருக்கும் அவருக்கு மூன்று முகங்களும் இரண்டு கொம்புகளும் காணப்படுகின்றன. நான்கு விலங்குகள் யானை, புலி, நீர்யானை, எருது வெவ்வேறு திசைகளைப்பார்த்த வண்ணம் அவரை சூழ்ந்துள்ளன. அவரது பாதத்தில் இரண்டு மான்கள் உள்ளன. இந்த உருவம் முத்திரைகளில் காணப்படுகிறது, அவர்களது முக்கிய பெண் கடவுள் தாய்க் கடவுளாகும். இதன் சுடுமண் வடிவங்கள் கிடைக்கின்றன. பிற்காலத்தில்
லிங்க வழிபாடும் காணப்பட்டது. ஹரப்பா மக்கள் மரங்களையும், விலங்குகளையும் கூட வழிபட்டனர். பேய்கள், கெட்ட ஆவிகள் போன்றவற்றின்மீது நம்பிக்கை கொண்டிருந்த அவர்கள் தங்கனளப் பாதுகாத்துக் கொள்ள தாயத்துக்களையும் அணிந்தனர்.