ரஜஸ்தமஷ்சாபிபூய ஸத்த்வம் பவதி பாரத। ரஜ: ஸத்த்வம் தமஷ்சைவ தம: ஸத்த்வம் ரஜஸ்ததா॥ 14.10 ॥ |
அர்ஜுனா ! சத்வ குணம் ரஜசையும் தமசையும், ரஜோ குணம் சத்வத்தையும் தமசையும், அவ்வாறே, தமோ குணம் ரஜசையும் சத்வத்தையும் அடக்கி மேலெழுகிறது.
ஸர்வத்வாரேஷு தேஹே அஸ்மிந்ப்ரகாஷ உபஜாயதே। ஜ்ஞாநம் யதா ததா வித்யாத்விவ்ருத்தம் ஸத்த்வமித்யுத॥ 14.11 ॥ |
இந்த உடம்பின் எல்லா வாசல்களிலும் எப்போது அறிவின் ஒளி பிரகாசிக்கின்றதோ அப்போது சத்வ குணம் ஓங்கியுள்ளது என்று அறிந்துகொள்.
லோப: ப்ரவ்ருத்திராரம்ப: கர்மணாமஷம: ஸ்ப்ருஹா। ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே பரதர்ஷப॥ 14.12 ॥ |
அர்ஜுனா ! ரஜோ குணம் மேலெழும் போது பேராசை புறநாட்டம், கர்மங்களை ஆரம்பித்தல், கட்டுப்பாடின்மை, ஆசை ஆகியவை உண்டாகின்றன.
அப்ரகாஷோ அப்ரவ்ருத்திஷ்ச ப்ரமாதோ மோஹ ஏவ ச। தமஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே குருநந்தந॥ 14.13 ॥ |
குரு குலத்தில் உதித்தவனே ! தமோ குணம் மேலெழும் போது விவேகமின்மை, முயற்சியின்மை, கவனமின்மை, மனமயக்கம் ஆகியவை உண்டாகிறது.
யதா ஸத்த்வே ப்ரவ்ருத்தே து ப்ரலயம் யாதி தேஹப்ருத்। ததோத்தமவிதாம் லோகாநமலாந்ப்ரதிபத்யதே॥ 14.14 ॥ |
சத்வ குணம் ஓங்கியிருக்கும் போது இறப்பவன் மேலான உண்மையை அறிந்தவர்கள் செல்கின்ற மாசற்ற உலகங்களை அடைகிறான்.