அதிகாரம் 4
2 அவனை நோக்கி, "மகனே, என் வாய்மொழிகளைக் கேட்டு அவற்றை உன் இதயத்தின் ஆழத்தில் பதிய வை.
3 கடவுள் என் உயிரை எடுத்துக் கொண்ட பின் என் உடலை அடக்கம் செய். உன் தாயின் வாழ்நாள் முழுவதும் அவளை மதித்துப் போற்று.
4 அவளது வயிற்றில் நீ இருக்கும் போது உன் பொருட்டு அவள் எத்தனை துன்ப துயரங்களை அனுபவித்தாள் என்பதை நீ நினைவில் கொள்ள வேண்டும்.
5 அவளும் உயிர் நீத்தப்பின் என் அருகிலேயே அவளை அடக்கம் செய்.
6 உன் வாழ்நாள் எல்லாம் கடவுளை உன் எண்ணத்தில் கொண்டிரு. ஒருகாலும் பாவத்துக்கு இணங்காதபடியும், நம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை மீறாதபடியும் எச்சரிக்கையாய் இரு.
7 உன் உடைமையிலிருந்து தானம் செய். எந்த ஏழையைக் கண்டாலும் புறக்கணியாது அவனுக்குப் பரிவு காட்டு. அவ்வாறு செய்தால் கடவுளும் உன்னைப் புறக்கணியாமல் உனக்குப் பரிவு காட்டுவார்.
8 உன் நிலைமைக்கு ஏற்ப பிறர் மேல் இரக்கம் காட்டு.
9 உனக்கு மிகுதியான செல்வம் இருக்கும் போது ஏராளமாய்க் கொடு@ குறைந்த செல்வம் இருக்கும் போது கொஞ்சமாய், ஆனால் நன்மனத்தோடு கொடுக்கும்படி கவனித்துக்கொள்.
10 இவ்வாறு நீ செய்தால், தேவைப்படும் நாளில் அதுவே உனக்குப் பேருதவியாய் இருக்கும்.
11 ஏனெனில் ஈகை எல்லாப் பாவங்களினின்றும் சாவினின்றும் ஒருவனை மீட்கிறது. அத்தோடு ஆன்மாவை இருளினின்று விடுவிக்கிறது.
12 தானம் கொடுப்போர் அனைவர்க்கும் அவர்களின் ஈகை உன்னத கடவுளின் திருமுன் ஆழ்ந்த நம்பிக்கையைத் தரும்.
13 எவ்வித விபசாரத்திற்கும், மகனே, இடம் கொடாதே. உன் மனைவியைத் தவிர வேறெந்தப் பெண்ணோடும் உறவு வைத்துக் கொள்வதன் மூலம் பாவம் புரிய இணங்காதே.
14 உன் சிந்தையிலாவது சொல்லிலாவது எப்போதேனும் ஆணவம் தலைகாட்ட விடாதே. ஏனெனில் எல்லாக் கேடுகளுக்கும் அடிப்படை ஆணவமே.
15 எவனாவது உனக்கு ஏதேனும் ஒரு வேலை செய்திருந்தால், உடனே அவனுக்குக் கூலி கொடுக்கவேண்டும். வேலைக்காரரது கூலி ஒருபோதும் உன்னிடம் இருக்கலாகாது.
16 அயலான் உனக்கு வருத்தமுண்டாகும்படி செய்த எதையும் நீ மற்றவனுக்கு ஒருபோதும் செய்யாதபடி பார்த்துக்கொள்.
17 பசித்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் உன் உணவைப் பங்கிட்டு உண்பதும், உடையற்றவர்களை உன் சொந்த ஆடைகளால் உடுத்துவதும் நல்லது.
18 உன் அப்பத்தையும் இரசத்தையும் நீதிமானின் கல்லறையில் வைத்துப் பரிமாறு@
19 பாவிகளோடு கூடி உண்ணாதே. ஞானியிடம் எப்போதும் ஆலோசனை கேள்.
20 எக்காலத்தும் கடவுளை ஏத்திப் போற்று. அவர் உன்னை வழி நடத்தும்படியும், உன் ஆலோசனைகள் எல்லாம் அவரிடத்தில் நிலைகொள்ளும்படியும் அவரை மன்றாடு
21 மகனே, நான் இன்னுமொரு செய்தியை உன்னிடம் கூறவேண்டும். அதாவது: நீ சிறுவனாய் இருந்த போது, கபேலுசு என்பவனுக்கு நான் பத்துத் தாலந்து வெள்ளி கடன் கொடுத்தேன். அவன் மேதியர்களின் நகரான இராஜேசில் குடியிருக்கிறான்.
22 அந்த கடன் பத்திரம் என்னிடம் இருக்கிறது. ஆகவே நீ அவனிடம் சென்று மேற்சொன்ன தொகையை அவனிடமிருந்து பெற்றுக்கொண்டு, அவன் கொடுத்த சீட்டை அவனுக்கு,த திரும்பிக் கொடுத்துவிடும்படி ஆவன செய்.
23 அஞ்சாதே மகனே| நாம் ஏழ்மையில் வாழ்வது உண்மையே. ஆயினும், நாம் கடவுளுக்கு அஞ்சி, எவ்விதப் பாவத்தையும் விட்டு விலகி நன்மை செய்து வருவோமானால், ஏராளமான நன்மைகள் நம்மை வந்தடையும்" என்று கூறினார்.