அதிகாரம் 3
2 உம் தீர்ப்புகள் அனைத்தும் நேர்மையானவையே@ உம் வழிகள் எல்லாம் இரக்கமும் உண்மையும் நீதியுமானவையே.
3 ஆண்டவரே, இப்பொழுது அடியேனை நினைவு கூர்ந்தருளும். என் பாவங்களுக்காகப் பழிவாங்கவும் வேண்டாம்@ என் குற்றங்களையும் என் பெற்றோரின் தீச்செயல்களையும் நினைக்கவும் வேண்டாம்.
4 ஏனெனில், நாங்கள் உம் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தோமில்லை. அதன் பொருட்டு நீர் எங்களை எந்நாடுகளில் சிதறடித்தீரோ, அந்நாட்டுக் குடிகளெல்லாம் எங்களைக் கொள்ளையிடவும் சிறைப்படுத்தவும் சாகடிக்கவும் கேலி செய்யவும், இட்டுக்கட்டி எங்களைப் பழிக்கவும் எங்களை அவர்கள் கையில் ஒப்புவித்து விட்டீரே.
5 இப்போதும் ஆண்டவரே, நாங்கள் உம் கட்டளைகளின்படி செயல் புரியாமலும், உமது திருமுன் நேர்மையுடன் நடவாமலும் போனதாலன்றோ உமது பயங்கரமான தீர்ப்புகளுக்கு ஆளானோம்?
6 எனவே ஆண்டவரே, உமது விருப்பம்போல் என்னை நடத்தி, என்னை அமைதியில் இளைப்பாறக் கட்டளையிட்டருளும். ஏனெனில், நான் உயிர் வாழ்வதை விட இறப்பதே மேல்" என்று வேண்டிக் கொண்டார்.
7 அதே நாளில் நிகழந்ததாவது: மேதியருடைய ஊராகிய இராஜேசு நகரில் இரகுவேலின் மகள் சாராளை அவளுடைய தந்தை வீட்டு ஊழியக்காரிகளில் ஒருத்தி பழித்துப் பேசினாள்.
8 அதற்குக் காரணம், அவள் ஏழு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள். அவர்கள் அவளோடு சேர்ந்தவுடன் அசுமோதேயுசு என்ற பேய் அவர்களைக் கொன்று போட்டது.
9 ஆகையால் அவ்வூழியக்காரி செய்த குற்றத்தைக் குறித்து சாராள் அவளைக் கடிந்து பேசின போது, வேலைக்காரி அவளை நோக்கி, "நீ உன் கணவர்களைக் கொன்றவள்@ உன் வயிற்றில் பிறந்த மகனையோ, மகளையோ நாங்கள் பூமியின் மீது காணாதிருக்கட்டும்.
10 நீ ஏற்கெனவே ஏழு கணவர்களைக் கொன்றுவிட்டாய். அவ்விதமே என்னையும் கொல்ல உனக்கு விருப்பமோ?" என்றாள். இவ்வார்த்தையைக் கேட்டவுடன் சாராள் தன் வீட்டின் மாடிக்குப் போய் மூன்று நாள் இரவு பகலாக ஒன்றும் உண்ணாமலும் குடியாமலும் இருந்தாள்.
11 செபத்தில் நிலைத்து, இந்த நிந்தையினின்று தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று கண்ணீர் விட்டு அழுது கடவுளை இறைஞ்சி மன்றாடி வந்தாள்.
12 மூன்றாம் நாளில், அவள் தன் செபத்தை முடித்துக் கடவுளை வாழ்த்தத் தொடங்கினாள்:
13 எங்கள் முன்னோரின் கடவுளே, உமது திருப்பெயர் வாழ்த்தப் பெறுவதாக| நீர் கடிந்து கொண்டாலும் தயை காட்டுகிறீர். துன்ப காலத்தில் உம்மை மன்றாடுகிறவர்களின் பாவங்களை மன்னிக்கிறீர்.
14 ஆண்டவரே, உம்மை நோக்கியே என் முகத்தைத் திருப்புகிறேன். என் கண்களை ஏறெடுத்து உம்மை நோக்கியே கூப்பிடுகிறேன்.
15 ஆண்டவரே, நிந்தை என்ற சங்கிலியால் கட்டுண்ட எண்னைக் காத்தருளும். இன்றேல், பூமியினின்று என்னை எடுத்துக் கொள்ளும்.
16 இதுவே என் மன்றாட்டு. நான் ஒருபோதும் கணவன் மீது தவறான ஆசை கொண்டிருந்ததில்லை என்றும், எல்லாச் சிற்றின்ப ஆசைகளிலுமிருந்தும் என் ஆன்மாவைத் தூய்மையாய்க் காத்து வந்துள்ளேன் என்றும் ஆண்டவராகிய உமக்குத் தெரியுமே!
17 பொறுப்பற்றவர்களோடு நான் ஒருகாலும் சேர்ந்ததுமில்லை சரசம் பண்ணினவர்களோடு நான் ஒருகாலும் கூடினதுமில்லை.
18 நான் உமக்கு அஞ்சிக் கணவனை ஏற்றுக் கொண்டேனே அன்றி, சிற்றின்ப வேட்கையை நிறைவேற்ற அல்லவே.
19 ஒன்றில், நான் அவர்களுக்குத் தகுந்தவள் அல்ல@ அல்லது ஒருவேளை நீர் வேறொருவனுக்கு என்னை நியமித்திருந்ததால், அவர்கள் எனக்குத் தகுந்தவர்கள்~ அல்லர் போலும்.
20 உமது திருவுளத்தை அறிய மனிதனுக்கு ஆற்றல் உண்டோ? ஆயினும், உம்மை வழிபடுவோர் அனைவர்க்கும் ஒன்றுமட்டும் உறுதி:
21 அதாவது, ஒருவன் தன் வாழ்நாளில் சோதிக்கப்பட்டால் முடிவில் அவன் வெற்றி அடைவான்@ துன்பதுயரம் வந்துற்றால் அவற்றினின்று விடுதலை பெறுவான்@ தண்டிக்கப்பட்டால் உம் இரக்கத்தைப் பெறுவான்.
22 காரணம், எங்கள் அழிவில் நீர் மகிழ்பவர் அல்ல. ஏனெனில், புயலுக்குப்பின் நீர் அமைதி அளிக்கின்றீர்@ கண்ணீர், புலம்பலுக்குப்பின் மகிழ்ச்சி தருகின்றீர்.
23 இஸ்ராயேலின் கடவுளே, உமது திருப்பெயர் என்றென்றும் வாழ்த்தப் பெறுவதாக!" என்றாள்.
24 அந்நேரத்திலேயே அவர்கள் இருவரின் மன்றாட்டுகளும் உன்னத கடவுளின் மகிமைத் திருமுன் கேட்டருளப்பட்டன.
25 ஆதலால், ஒரே காலத்தில் ஆண்டவர் திருமுன் மன்றாடி வேண்டிக்கொண்ட அவ்விருவரின் குறையும் நீங்கும் பொருட்டு ஆண்டவரின் புனித தூதர் இரபாயேலைக் கடவுள் அனுப்பி வைத்தார்.