புத்தேர்பேதம் த்ருதேஷ்சைவ குணதஸ்த்ரிவிதம் ஷ்ருணு। ப்ரோச்யமாநமஷேஷேண ப்ருதக்த்வேந தநம்ஜய॥ 18.29 ॥ |
புத்தி மற்றும் மன உறுதியின் தன்மைகளுக்கு ஏற்ப மூன்று விதமான வேறுபட்ட கண்ணோட்டங்களை தனித்தனியாக முற்றிலும் சொல்கிறேன் கேள்.
ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாபயே। பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்தி: ஸா பார்த ஸாத்த்விகீ॥ 18.30 ॥ |
அர்ஜுனா ! உலகியல் வாழ்க்கை – முக்திபாதை, செய்ய தகாதது – செய்ய தக்கது, பயம் – பயமின்மை, பந்தம் – மோட்சம் ஆகியவற்றிக்கு இடையே உள்ள வேறுபாட்டை அறிவது சாத்வீக புத்தி.
யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச। அயதாவத்ப்ரஜாநாதி புத்தி: ஸா பார்த ராஜஸீ॥ 18.31 ॥ |
அர்ஜுனா ! தர்மத்தையும் அதர்மத்தையும் செய்ய தக்கதையும் செய்ய தகாததையும் தாறுமாறாக அறிவது ராஜச புத்தி.
அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸாவ்ருதா। ஸர்வார்தாந்விபரீதாம்ஷ்ச புத்தி: ஸா பார்த தாமஸீ॥ 18.32 ॥ |
அர்ஜுனா ! அறியாமை இருளால் மூடபெற்று அதர்மத்தை தர்மம் என்றும் எல்லாவற்றையும் விபரிதமாகவும் அறிவது தமாச புத்தி.