மௌன்ட்பேட்டன் திட்டம் (1947)
மௌன்ட்பேட்டன் |
1947 மார்ச் 24 ஆம் நாள் மிகுந்த அதிகாரங்களுடன் மவுன்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக பதவியேற்றார். இந்தியாவை பிரித்து பாகிஸ்தானை உருவாக்குவது என்பது தவிர்க்க முடியாதது என்று அவர் கருதினார். நீண்ட விவாதங்களுக்குப் பிறகு 1947 ஜூன் 3 ஆம் நாள் இந்தியப் பிரிவினைக்கான தனது திட்டத்தை அவர் அறிவித்தார். காங்கிரசும், முஸ்லிம் லீக்கும் இத்திட்டத்தை ஒப்புக்கொண்டன.
இந்திய விடுதலை சட்டம் (1947)
மௌன்ட்பேட்டன் திட்டத்தை ஏற்றுக்கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் 1947 ஜூலை 18 ஆம் நாள் இந்திய விடுதலை சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்தின் முக்கிய கூறுகள்:
இந்திய விடுதலை |
- பிரிட்டிஷ் அரசாங்கம் அனைத்து அதிகாரங்களையும் இவ்விரண்டு நாடுகளிடமும் வழங்கும்.
- பஞ்சாப், வங்காளம் இவ்விரண்டு மாகாணங்களின் எல்லைகளை வரையறுப்பதற்கு எல்லை வரையறுக்கும் ஆணையம் ஏற்படுத்தப்படும்.
- இவ்விரண்டு நாடுகளின் அரசியலமைப்பு குழுக்களுக்கு அரசியலமைப்பை உருவாக்கும் அதிகாரங்கள் வழங்கப்படும்.
ராட்கிளிப் தலைமையிலான எல்லை வரையறுக்கும் ஆணையம் இந்திய - பாகிஸ்தான் எல்லைகளை வரையறுத்தது. 1947 ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்தியாவும் ஆகஸ்டு 14ஆம் நாள் பாகிஸ்தானும் சுதந்திர நாடுகளாயின. சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநராக மௌன்ட்பேட்டன் பிரபு பொறுப்பு ஏற்றார். பாகிஸ்தானின் முதல் தலைமை ஆளுநராக முகமது அலி ஜின்னா பதவியேற்றார். 1948 ஐனவரி 30 ஆம் நாள் மிகவும் சோகமான நிகழ்ச்சியும் நடந்தேறியது. தேசத் தந்தை மகாத்மா காந்தியை அவர் வழிபாட்டுக் கூட்டத்துக்குச் செல்லும் வழியில் நாதுராம் கோட்சே சுட்டுக்கொன்றார்.