முகலாயர்கால ஓவியங்களில், அக்பர் நாமா உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுப்படைப்புகளும் கருத்துருக்களாக இடம் பெற்றிருந்தன. அவற்றில் முக்கியமானது ஹம்சா நாமா. அதில் 1200 ஓவியங்கள் இருந்தன. இந்திய வண்ணங்களான மயில் கழுத்துநீலம், இந்திய சிகப்பு போன்றவற்றையும் ஓவியர்கள் பயன்படுத்தத் தொடங்கினர்.
ஜஹாங்கீர் ஆட்சிக் காலத்தில் முகலாயர் ஓவியக்கலை அதன் உச்சியைத் தொட்டது. அபுல்ஹசன், பிஷன் தாஸ்,
தான்சேன்
மது, ஆனந்த், கோவர்தன், உஸ்தாத் மன்சூர் போன்ற ஏராளமான ஓவியர்களை அவர் பணியிலமர்த்தினார். வேட்டையாடுதல், போர் நிகழ்வுகள், அரசவைகள் போன்ற காட்சிகளைத்தவிர, உருவப்படங்களும், விலங்குகளின் படங்களும் ஓவியமாகத் தீட்டப்பட்டன. எழுத்துக்கலை, ஓவியங்கள் ஆகியவற்றைக் கொண்ட பல செருகேடுகளும் (ஆல்பம்) முகலாயர் காலத்தில் உருவாக்கப்பட்டன. பிற்காலத்தில் ஐரோப்பிய ஓவியப்பாணியின் தாக்கத்தை காணமுடிகிறது.
முகலாயர் காலத்தில் இசைக்கலையும் நன்கு வளர்ச்சியடைந்தது. குவாலியரைச் சேர்ந்த தான்சேன் என்ற பாடகரை அக்பர் ஆதரித்தார். தான்சேன் பல ராகங்களை உருவாக்கினார். ஜஹாங்கீர், ஷாஜகான் ஆகியோரும் இசையில் ஈடுபாடு கொண்டிருந்தனர்.
மொழி, இலக்கியம்
அக்பரது ஆட்சிக்காலத்தின்போது முகலாயப் பேரரசு முழுவதிலும் பாரசீக மொழி பரவலாக வழக்கிலிருந்தது. அக்காலத்தில் சிறந்த அறிஞராகவும், வராலாற்று ஆசிரியராகவும் அபுல்பாசல் விளங்கினார். அவர் ஏற்படுத்திய உரைநடைப்பாணி பல தலைமுறைக்காலம் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது.