அக்பரது ஆட்சிக்காலத்திலிருந்து ஏராளமான கட்டிடங்கள் அமைக்கும்பணி தொடங்கியது, அவர் கட்டியுள்ள பல கோட்டைகளில் ஆக்ராவிலுள்ள கோட்டை புகழ் வாய்ந்தது. அது சிகப்பு மணற் பாறைகளாலானது. லாகூர் மற்றும் அலகாபாத்தில் அக்பரது பிற கோட்டைகளைக் காணலாம். ஷாஜகான் ஆட்சிக் காலத்தில் கோட்டைகளை கட்டும் பணி அதன் உச்சியைத் தொட்டது. டெல்லியிலுள்ள செங்கோட்டை, அதில் அமைந்துள்ள ரங் மகால், திவானி ஆம், திவானி காஸ் போன்றவை அவரது படைப்புகளே.
அக்பர்- ஆக்ராவிலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பதேபூர் சிக்ரி (வெற்றி நகரம்) என்ற இடத்தில் அரண்மனைக் கோட்டை ஓன்றை எழுப்பினார். அந்த வளாகத்தில் குஜராத்தி மற்றும் வங்காளப் பாணியிலான பல கட்டிடங்கள் அமைந்துள்ளன. குஜராத்தி பாணிக் கட்டிடங்களை அக்பர் அவரது ரஐபுத்திர மனைவியருக்காக அமைத்திருக்கக் கூடும். அங்குள்ள ஜிம்மா மசூதி மிகவும் பிரம்மாண்டமான கட்டிடமாகும்.
பாஞ்ச மகால்
அந்த மசூதியின் நுழைவாயில் புலந்த் தர்வாசா அல்லது உயர்ந்த நுழைவாயில் எனப்படுகிறது. அதன் உயரம் 176 அடியாகும். குஜராத்தில் அக்பர் பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதற்காக அது எழுப்பப்பட்டது.
பதேபூர் சிக்ரியில் உள்ள ஜோத்பாய் அரண்மனை ஐந்து அடுக்குகள் கொண்ட பாஞ்ச் மகால் போன்றவையும் முக்கிய கட்டிடங்களாகும்.
டெல்லியிலுள்ள ஹூமாயூன் கல்லறை அக்பரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. அதன் குவிகை மாடம் பளிங்கினால் ஆனது. தாஜ்மகாலுக்கு முன்னோடியாக அதனைக் கருதலாம். ஆக்ராவுக்கு அருகிலுள்ள சிக்கந்தராவில் அக்பரின் கல்லறையை ஜஹாங்கீர் கட்டி முடித்தார். ஆக்ராவில் தனது தந்தை இதிமத் தௌலாவின் கல்லறையை நூர்ஜஹான கட்டியுள்ளார். வெள்ளைப் பளிங்குக் கற்களால் அது அமைக்கப்பட்டுள்ளது. அதன் சுவர்களில் விலை உயாந்த கற்கள்
தாஜ்மகால்
பதிக்கப்பட்ட பூவேலைப் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வகை அலங்கார வேலைகளுக்கு பியட்ரா டியூரா என்று பெயர். ஷாஜகான் கட்டிய தாஜ் மஹாலில் இவ்வகை அலங்கார பூவேலைப் பாடுகளை ஏராளமாகக் காணலாம். தாஜ்மகால் கட்டிடக் கலையின் மணிமகுட மாகக் கருதப்படுகிறது. முகலாயர்கள் வளர்த்தெடுத்த அனைத்து வகையான கட்டிடக்கலைப்பாணிகளும் அதில் காணப்படுகின்றன. தாஜ்மகாலின் முக்கிய சிறப்பே அதன் பெரிய குவிமாடமும் நான்கு மெல்லிய உயர் கோபுரங்களுமாகும். அலங்கார வேலைப்பாடுகள் குறைவாகவே காணப்படுகின்றன.