தென்னிந்திய தீபகற்பத்தின் முக்கிய நதிகள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று இணையாகவே பாய்ந்து செல்கின்றன. தீபகற்பத்தின் கிழக்குக் கோடியில் மகாநதி பாய்கிறது. நர்மதை, தபதி நதிகள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பாய்கின்றன. கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்திரா, காவிரி போன்ற பிற நதிகள் மேற்கிலிருந்து கிழக்காக பாய்கின்றன. இந்த நதிகளின் மூலம் கிடைக்கும் நீர்ப்பாசன வசதியால், நெல் விளையும் வளமான நிலப்பகுதிகளை இங்கு காணமுடிகிறது. ரெய்ச்சூர் தோ ஆப் எனப்படும் கிருஷ்ணா துங்கபத்திரை நதிகளுக்கு இடைப்பட்ட
நிலப்பகுதியை கைப்பற்றுவதற்காக தென்னிந்திய அரசுகள் தொடர்ந்து போட்டியிட்ட வண்ணம் இருந்தன. இவ்விரு நதிகளின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள சமவெளியில் சாதவாகனர்களின் அரசு புகழ்மிக்கு விளங்கியது. கிறித்துவ சகாப்தத்தின் முற்பகுதியில் இச்சமவெளியில் பல்வேறு நகரங்களும் துறைமுகங்களும் செழித்து விளங்கின.
|
காவிரிப் பள்ளத்தாக்கு |
இன்னும் தெற்கே, காவிரிப் பள்ளத்தாக்கு மிகவும் தனித்தன்மைகொண்ட புவியியல் அமைப்பை கொண்டுள்ளது. சோழப் பேரரசின் அமைவிடமாக அது விளங்கியது. பண்டைக் காலத்திலிருந்தே காவிரிப் பள்ளத்தாக்கு மொழி, பண்பாடு, பாரம்பரியம் போன்றவற்றுக்கு புகழ் பெற்றதாகும்.
தென்னிந்திய தீபகற்பம் நீண்ட கடற்கரையைக் கொண்டிருப்பதால் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கடல்சார் நடவடிக்கைகளில் பெரிதும் ஈடுபட்டுவந்தனர். பண்டைக்காலம் தொட்டே, கடல் வாணிபம் இப்பகுதியில் செழித்தோங்கியது. கிழக்கே, ஜாவா, சுமத்திரா, பர்மா, கம்போடியா போன்ற பகுதிகளுடன் வாணிகத் தொடர்பு இருந்து வந்தது. வாணிபம் தவிர இந்தியக் கலை, சமயம், பண்பாடு போன்றவையும் இப்பகுதிகளுக்கு பரவியது. தென்னிந்தியாவிற்கும், கிரேக்க - ரோமானியருக்கும் இடையே நிலவிய வர்த்தகம் மற்றும் பண்பாட்டுத் தொடர்பு வரலாற்றுப் புகழ்வாய்ந்தவையாகும்.
இந்தியா - வேற்றுமையில் ஒற்றுமை கானும் நாடு (India – A Land of Unity in Diversity)
|
வேற்றுமையில் ஒற்றுமை |
பல்வேறு இனமக்களும் ஒன்று கலந்த காலகட்டம் என்பதனால் பண்டைய இந்திய வரலாறு படிப்பதற்கு பரவசமூட்டுவதாக அமைந்துள்ளது. ஆரியருக்கு முற்பட்ட இனத்தவர் இந்தோ ஆரியர்கள், கிரேக்கர்கள், சைத்தியர்கள், ஹுணர்கள், துருக்கியர்கள் என பல்வேறு இனத்தவரும் இந்திய மண்ணை தங்களது தாயகமாகக் கொண்டனர். இந்தியப் பண்பாட்டை வளர்த்தெடுப்பதற்கு ஒவ்வொரு இனமும் தங்களாலான பங்களிப்பை வழங்கியுள்ளன. பல்வேறு இனங்களும் இன்று யார் எந்த இனம் என்று அடையாளம் காணமுடியாத அளவுக்கு ஒன்று கலந்துவிட்டன. காலங்காலமாக பல்வேறு பண்பாடுகளும் ஒன்று 'கலந்துவிட்டன. வேத இலக்கியங்களில் பல திராவிட அல்லது ஆரியருக்கு முந்தைய கால சொற்களைக் காண முடிகிறது. அதேபோல் சங்க இலக்கியத்தில் பாலி மற்றும் வடமொழிச் சொற்களும் உள்ளன.
பண்டைக் காலத்திலிருந்தே இந்தியாவில் பல சமயங்கள் இருந்துள்ளன. பண்டைய இந்தியாளில் இந்துசமயம், சமண, புத்த சமயங்கள் புகழ்பெற்றிருந்தன. ஆனால் பண்பாட்டளவில் இவை ஒன்றோடொன்று கலந்துவிட்டிருந்தன. இந்திய மக்கள் பல்லேறு மொழிகளைப் பேசினாலும் சமயங்களைப் பின்பற்றினாலும், சமூகப் பழக்கவழக்கங்களுக்கு உட்பட்டிருந்தாலும் நாடு முழுவதும் ஒரு சில பொதுப் பண்புள்ள வாழ்க்கை முறையைக் காணமுடிகிறது. எனவே நமது நாட்டில் வேற்றுமை களுக்கிடையே ஒற்றுமையுணர்வு மேலோங்கியுள்ளது என்று துணிந்து கூறலாம்.