துர்முகன்
காலம் : கி.பி. 630
என் பெயர் ஹர்ஷவர்த்தனன். நல்லொழுக்க சூரியன் என்று பொருள் படும் சீலாதித்தியன் என்ற பட்டத்தை நான் சூடிக்கொண்டேன். இரண்டாவது சந்திரகுப்தன் பராக்கிரம சூரியன் என்று பொருள்படும் விக்கிரமாதித்யன் என்ற பட்டத்தைத் தேர்ந்தெடுத்தான். நானோ, இந்த மிருதுவான இனிய பட்டத்தையே நானோ விரும்பினேன். விக்கிரமம் (பராக்கிரமம்) என்ற சொல்லிலே பிறரை அழுத்துவது மற்றவரைத் துன்புறுத்துவது என்ற பாவங்கள் மறைந்து நிற்கின்றன. ஆனால், சீலம் (நல்லொழுக்கம்) என்ற சொல்லிலே, அழுத்தல் - துன்புறுத்தல் என்ற உணர்ச்சியே கிடையாது. குப்தர்கள் தங்களை பரம வைஷ்ணவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். என் தமையன் ராஜ்யவர்த்தனன் பௌத்த மதத்தைப் பின்பற்றினான்; சாக்ஷாத் புத்த பகவானைப் போன்ற கருணாமூர்த்தியாகிய அவனை கௌடசசாங்கன், இளமையிலேயே ஏமாற்றிக் கொலை செய்துவிட்டான். அந்தச் சம்பவத்தை இன்று நினைத்தாலும் என் இதயம் நடுங்குகிறது. என் தமையனின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடக்கும் மாணாக்கனாயினும், நான் சைவ சமயத்தையே தேர்ந்தெடுத்தேன். நான் மகேஸ்வரனை வணங்கும் சைவனாக இருந்தாலும், என் இதயத்திலே நிரம்பியிருக்கும் பௌத்த பக்தியைப் பாரத தேசம் மட்டுமல்ல, அதற்கு வெளியில் உள்ள உலகமும் நன்கறியும். நான் எனது ராஜ்யத்திலுள்ள எல்லா மதங்களையும் பாராட்டவே செய்கிறேன். கேவலம், பிரஜைகளைத் திருப்திபடுத்துவதற்காக மட்டுமல்ல; என்னுடைய நல்லொழுக்கத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை எனது அரச
பொக்கிஷத்திலேயே மிஞ்சியிருக்கும் பணத்தையெல்லாம் பிரயாகையில் உள்ள திரிவேணிக் கரையில் பிராமணர்களுக்கும் பௌத்த பிக்ஷு க்களுக்கும் நான் பங்கிட்டுக் கொடுப்பது வழக்கம். நான் எல்லா மதத்தையும் சமமாகவே பாவிக்கிறேனென்பது இதிலிருந்து தெளிவாகத் தெரியும். சந்திர குப்த விக்கிரமாதித்தியனைப் போலவே, நானும் வெற்றி யாத்திரைகள் செய்திருக்கிறேன். ஆனால், அவையெல்லாம் சீலாதித்தியன் என்ற பட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்னால், தென்திசையின் அரசன் புலிகேசியிடம் நான் தோல்வியடைந்திருக்காவிட்டால், நான் இந்த சீலாத்தியன் என்ற பட்டத்தை ஏற்றுக் கொள்ளாமல் சந்திரகுப்த விக்கிரமாதித்தனைப் போலவே ஒரு வீரப் பட்டத்தை ஏற்றுக் கொண்டிருப்பேன் என்று நீங்கள் தவறாகக் கருத வேண்டாம். நான்