திவ்யமால்யாம்பரதரம் திவ்யகந்தாநுலேபநம்। ஸர்வாஷ்சர்யமயம் தேவமநந்தம் விஷ்வதோமுகம்॥ 11.11 ॥ |
அந்த வடிவம் அழகிய மாலைகளும் ஆடைகளும் அணிந்தது. சிறந்த வாசனை திரவியங்கள் பூசியது. பெரும் வியப்பை ஊட்டுவது. ஒளியுடன் பிரகாசிப்பது. எல்லையற்றது. எங்கும் முகம் உடையது.
திவி ஸூர்யஸஹஸ்ரஸ்ய பவேத்யுகபதுத்திதா। யதி பா: ஸத்ருஷீ ஸா ஸ்யாத்பாஸஸ்தஸ்ய மஹாத்மந:॥ 11.12 ॥ |
ஆயிரம் சூரியர்கள் ஒரே நேரத்தில் ஆகாயத்தில் உதித்தால் அது பரம்பொருளின் ஒளிக்கு சமமாக இருக்கும்.
தத்ரைகஸ்தம் ஜகத்க்ருத்ஸ்நம் ப்ரவிபக்தமநேகதா। அபஷ்யத்தேவதேவஸ்ய ஷரீரே பாண்டவஸ்ததா॥ 11.13 ॥ |
பலவிதமாக தோன்றுகின்ற பிரபஞ்சம் முழுவதும் அந்த தேவதேவனுடைய உடம்பில் ஒன்று சேர்ந்திருப்பதை அர்ஜுனன் அப்போது கண்டான்.
தத: ஸ விஸ்மயாவிஷ்டோ ஹ்ருஷ்டரோமா தநம்ஜய:। ப்ரணம்ய ஷிரஸா தேவம் க்ருதாஞ்ஜலிரபாஷத॥ 11.14 ॥ |
உடனே அர்ஜுனன் வியப்புடனும், மயிர்சிலிர்ப்புடனும் அந்த தேவனை தலையால் வணங்கி கூப்பிய கைகளுடன் கூறலானான்.
அர்ஜுன உவாச। |
பஷ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே
ஸர்வாம்ஸ்ததா பூதவிஷேஷஸங்காந்। ப்ரஹ்மாணமீஷம் கமலாஸநஸ்தம் க்ருஷீம்ஷ்ச ஸர்வாநுரகாம்ஷ்ச திவ்யாந்॥ 11.15 ॥ |
அர்ஜுனன் கூறினான்: எம்பெருமானே ! உனது திருமேனியில் எல்லா தேவர்களையும், பல்வேறு உயிரினங்களையும், தாமரையில் வீற்றியிருக்கின்ற பிரம்மாவையும், சிவனையும், எல்லா ரிஷிகளையும், தேவ சர்ப்பங்களையும் காண்கிறேன்.