விளக்கம்:
நெருப்பு மிகவும் பிரகாசமானது ஆனால் நெருப்பை சுற்றி எப்போதும் சாம்பலும் புகையும் சூழ்ந்திருப்பதால் நெருப்பின் பிரகாசம் சரியாக தெரியாமல் மங்கலாக தெரிகிறது. அதை போலவே மிகவும் சக்தி வாய்ந்தது நமது புத்தி. ஆனால் ஆசை, காமம், கோபம் போன்றவை சூழ்ந்திருக்கின்றன. அதனால் புத்தி மந்தமாகி விடுகிறது. சக்தியை இழந்து விடுகிறது. சக்தி வாய்ந்த திடமான மனத்தை கொண்டு இந்த ஆசை கோபம் காமம் இவற்றை வெட்டி ஏறிய வேண்டும். அப்போது தான் புத்தி உண்மையை அறிந்து அது தர்மத்தின் வழியில் செயல்பட தொடங்கும். உண்மையை சரியாக உள்ளது உள்ளபடி அறிந்தவனுக்கு எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்பது தெளிவாக விளங்கும். அவன் நல்வழியில் சென்று விரைவாக இறைவனை அடைவான். மனித உடலின் உறுப்புகள் ( கை, கால், வாய், மூக்கு, கண் ) போன்றவை புலன்கள் என்று அழைக்கபடுகிறது. இந்த புலன்கள் சக்தி வாய்ந்தவை. இவற்றை விட சக்தி வாய்ந்தது மனிதனின் மனம். மனிதனின் மனத்தை விட சக்தி வாய்ந்தது புத்தி. புத்தியை விட சக்தி வாய்ந்தது தனது இதயத்தில் இருக்கும் ஆன்மா. இறைவன் அனைத்து உயிரினத்தின் இதயத்திலும் ஆன்மாவாக இருக்கிறார். இந்த ஆன்மாவை தனது சுத்தமான புத்தியால் காண முயல வேண்டும்.