யே மே மதமிதம் நித்யமநுதிஷ்டந்தி மாநவா:। ஷ்ரத்தாவந்தோ அநஸூயந்தோ முச்யந்தே தே அபி கர்மபி:॥ 3.31 |
யார் இந்த எனது கருத்தை நம்பிக்கையுடனும், அற்பமான ஆட்சேபனைகளை எழுப்பாமலும் தொடர்ந்து பின்பற்றுகிறார்களோ அவர்கள் செயல்களிலிருந்து விடுபடுகிறார்கள்.
யே த்வேததப்யஸூயந்தோ நாநுதிஷ்டந்தி மே மதம்। ஸர்வஜ்ஞாநவிமூடாம்ஸ்தாந்வித்தி நஷ்டாநசேதஸ:॥ 3.32 |
யார் இந்த எனது கருத்தை இகழ்ந்து பேசி பின்பற்றாமல் இருக்கிறார்களோ, எல்லா விதத்திலும் முட்டாள்களான, விவேகம் அற்றவர்களான அவர்கள் வாழ்க்கையை இழந்தவர்கள் என்று அறிந்துகொள்.
ஸத்ருஷம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதேர்ஜ்ஞாநவாநபி। ப்ரக்ருதிம் யாந்தி பூதாநி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி॥ 3.33 |
அறிவாளியும் தன் மனபோக்கிற்கு ஏற்பவே செயல்படுகிறான். மனிதர்கள் தங்கள் மனஇயல்பையே பின்பற்றுகின்றனர். அடக்குவது என்ன செய்யும் ?
இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்தே ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ। தயோர்ந வஷமாகச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்திநௌ॥ 3.34 |
பொருட்களில் விருப்பும் வெறுப்பும் கொல்வது புலன்களின் இயல்பு. யாரும் அவற்றிக்கு வசப்பட கூடாது. ஏனெனில் அவை மனிதனின் எதிரிகள்.
ஷ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்। ஸ்வதர்மே நிதநம் ஷ்ரேய: பரதர்மோ பயாவஹ:॥ 3.35 |
பிறருடைய தர்மத்தை நன்றாக செய்வதை விட, நிறைவில்லாததாக இருந்தாலும் சொந்த தர்மத்தை பின்பற்றுவது சிறப்பானது. சொந்த தர்மத்தை பின்பற்றி மரணத்தை தழுவுவதுகூட சிறப்பானதே. ஏனெனில் பிறருடைய தர்மம் பயம் நிறைந்தது.
அர்ஜுன உவாச। |
அத கேந ப்ரயுக்தோ அயம் பாபம் சரதி பூருஷ:। அநிச்சந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித:॥ 3.36 |
அர்ஜுனன் கேட்டது : விருஷ்ணி குலத்தில் உதித்தவனே ! விருப்பம் இல்லாவிட்டாலும் பலவந்தமாக ஏவப்பட்டவனைபோல் எதனால் தூண்டப்பட்டு மனிதன் பாவம் செய்கிறான்.