1666ல் சிவாஜி ஆக்ராவுக்கு சென்றபோது, முகலாயரால் சிறைப்பிடிக்கப்பட்டார். ஆனால் சிறையிலிருந்து தந்திரமாக தப்பிய சிவாஜி அடுத்த நான்கு ஆண்டுகளில் தனது படைகளை வலிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் முகலாயருக்கெதிரான போரை மீண்டும் தொடங்கினார். 1670ல் சூரத் துறைமுகம் மீண்டும் சிவாஜியால் சூரையாடப்பட்டது. தனது படையெடுப்புகள் மூலம் இழந்த பகுதிகளையெல்லாம் சிவாஜி மீட்டார். 1674ல் ராய்காரில் சிவாஜி முடிகுட்டிக் கொண்டதுடன் சத்திரபதி என்ற பட்டத்தையும் சூட்டிக்கொண்டார். பின்னர் அவர் கர்னாடகப்பகுதியின் மீது படையெடுத்து செஞ்சி, வேலூர் ஆகியவற்றைக் கைப்பற்றினார். வெற்றிபெற்றுத் திரும்பிய சிவாஜி 1660ல் மறைந்தார்.
சிவாஜியின் ஆட்சி முறை
லோஹாகாட் கோட்டை
சிவாஜி ஒரு சிறந்த ஆட்சியாளராகவும் திகழ்ந்தார். ஒரு சிறந்த ஆட்சியமைப்புக்கு அவர் அடிகோலினார். அரசாங்கத்தின் மையமாக அரசர் செயல்பட்டார். அரசருக்கு உதவியாக எட்டு அமைச்சர்கள் கொண்ட அஷ்டபிரதான் என்ற அமைச்சரவை இருந்தது. இருப்பினும் ஒவ்வொரு அமைச்சரும் சிவாஜிக்கே நேரடியாக பொறுப்பு வாய்ந்தவாகளாக இருந்தனர்.
1 பேஷ்வா - நிதி மற்றும் பொது நிர்வாகம். பின்னர் பேஷ்லா பிரதம அமைச்சராகவும் செயல்பட்டார்.
2. சார்-இ-நோபத் அல்லது சேனாதிபதி - படைத் தளபதி - கௌரவப்பதவி
3. அமத்தியர் - கணக்கு மேலாளர்
4. வாக்நவின் - உளவுத் துறை, அஞ்சல் மற்றும் அரண்மனை நிர்வாகம்
5. சச்சீவ் - தகவல் தொடர்பு
6. அமந்தா - சடங்குகள்
7. நியாயதீஷ் - நீதித்துறை
8. பண்டிதராவ் - அறக்கொடை மற்றும் சமய நிர்வாகம்
சிவாஜி மேற்கொண்ட பெரும்பாலான ஆட்சித்துறை சீர்திருத்தங்கள் தக்காண சுல்தானியத்தில் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகளையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. எடுத்துக் காட்டாக, பேஷ்வா என்பது பாரசீகத்து பட்டமாகும்.