அமிர்குஸ்ரு அக்காலத்தில் வாழ்ந்த சிறந்த பாரசீக அறிஞர். ஏராளமான பாடல்களை எழுதியுள்ள அவர், பல்வேறு கவிதை வடிவங்களை பரிசோதித்து, சபாக்-இ-இந்த் என்ற இந்தியப் பாணியிலான பாரசீக கவிதை வடிவத்தை உருவாக்கினார். சில இந்திப் பாடல்களையும் அவர் எழுதியுள்ளார். அமிர் குஸ்ரு அலாவுதீன் கில்ஜியின் வெற்றிகளைக் கூறும் காசெய்ன்-உல்-ஃபுகு என்ற நூலையும் எழுதியுள்ளார். அவரது புகழ்பெற்ற நூலான துக்ளக் நாமா கியாசுதீன் துக்ளக்கின் எழுச்சியை விவரிக்கிறது.
வடமொழியும், பாரசீக மொழியும் டெல்லி சுல்தானியத்தின் இணைப்பு மொழிகளாகத் திகழ்ந்தன. வடமொழிக் கதைகள் பலவற்றை
அல்பரூனி
பாரசீக மொழியில் முதன்முதலில் மொழி பெயர்த்தவர் நக் ஷபி. துது நாமா அல்லது கிளிமொழி என்ற புகழ்பெற்ற நூல் துருக்கி மொழியிலும் பின்னர் பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டது. காஷ்மீர் அரசர் ஜெயினுலாபதீன் ஆட்சிக் காலத்தில் கல்ஹணர் ராஜதரங்கிணியைப் படைத்தார். பல்வேறு மருத்துவம் மற்றும் இசை தொடர்பான நூல்களும் பாரசீக மொழியில் மொழியாக்கம் பெற்றன.
அல்பரூனி எழுதிய கிதாப்-உல்-இந்த் அராபிய மொழியில் படைக்கப்பட்ட புகழ்பெற்ற நூலாகும். பிராந்திய மொழிகளும் அக்காலத்தில் வளர்ச்சியடைந்தன. சந்த் பராடி அக்காலத்திய சிறந்த இந்திக் கவிஞர். வங்காள இலக்கியமும் வளர்ச்சியடைந்தது. நுஸ்ரத் ஷா மகாபாரதத்தை வங்காளத்தில் மொழிபெயர்ப்பதற்கு உறுதுணையாக இருந்தார். குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகள் வளர்வதற்கு பக்தி இயக்கம் வழிவகுத்தது. விஜயநகரப் பேரரசு தெலுங்கு மற்றும் கன்னட மொழி இலக்கியங்களின் வளர்ச்சிக்கு உதவியது.