அடுத்து ஆளுநராக வந்தவர்கள் மேற்குக் கடற்கரையில் டாமன், சால்சட், பம்பாய் ஆகிய இடங்களிலும் கிழக்குக் கடற்கரையில் சென்னைக்கருகில் சாந்தோம், வங்காளத்தில் ஹூக்ளி ஆகிய இடங்களிலும் போர்ச்சுகீசிய குடியிருப்புகளை ஏற்படுத்தினர்.
இருப்பினும் பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் போர்ச்சுகீசிய ஆதிக்கம் வீழ்ச்சியடையத்தொடங்கியது. அடுத்த நூற்றாண்டில் கோவா, டையு, டாமன் தவிர ஏனைய பகுதிகள் அனைத்தையும் அவர்கள் இழந்தனர்.
டச்சுக்காரர்கள்
டச்சு கிழக்கிந்திய கம்பனி கொடி
1602 ஆம் ஆண்டு டச்சு கிழக்கிந்திய வணிகக்குழு ஏற்படுத்தப்பட்டது. டச்சு வணிகர்கள் இந்தியாவிற்கு வந்து மசூலிப்பட்டினம், புலிகாட், சூரத், காரைக்கால், நாகப்பட்டினம், சின்கரா, காசிம்பசார் ஆகிய இடங்களில் குடியிருப்புகளை நிறுவினர். பதினேழாம் நூற்றாண்டில் அவர்கள் போர்ச்சுகீசியரை வெற்றி கொண்டு கிழக்கே ஐரோப்பிய வணிகத்தில் வலிமை கொண்டு விளங்கினர். இந்தியாவில் டச்சுக்காரர்களின் முக்கிய மையமாக புலிகாட் அல்லது பழவேற்காடு இருந்தது. பின்னர், நாகப்பட்டினம் தலைமையிடமாயிற்று. பதினேழாம் நூற்றாண்டில் இடைப்பகுதியில் ஆங்கிலேயர்கள் பெரிய குடியேற்ற சக்தியாக எழுச்சிபெற்றனர். ஆங்கிலேய - டச்சு ஆதிக்கப் போட்டி சுமார் எழுபது ஆண்டுகள் நீடித்தது. அப்போது டச்சுக்காரர்கள் தங்களது குடியேற்றங்களை ஒவ்வொன்றாக பிரிட்டிஷாரிடம் இழந்தனர்.