19, 20 ஆம் நூற்றாண்டுகளில் பர்தா அணியும் வழக்கத்துக்கெதிராக குரல்கள் எழுந்தன. குடியானவர்களிடையே இந்த வழக்கம் கடுமையானதாக இல்லை. தென்னிந்தியாவிலும் இவ்வழக்கம் பெருமளவு காணப்படவில்லை. தேசிய இயக்கத்தில் அதிக அளவிலான பெண்கள் கலந்து கொண்டனர். காலப்போக்கில் எந்தவொரு குறிப்பிட்ட சட்டமும் இயற்றப்படாமலேயே இவ்வழக்கம் மறைந்து போயிற்று.
ஜாதி முறைக்கு எதிரான போராட்டமும் அது தொடர்பான சட்டங்களும்
பீம்ராவ் அம்பேத்கர்
பெண்கள் விடுதலைக்கு அடுத்த நிலையில் சமூக சீர்திருத்தவாதிகள் ஜாதிக் கொடுமைகளுக்கு எதிரான இயக்கங்களை முன்னின்று நடத்தினர். இந்திய சமுதாயத்தில் ஜாதிமுறை ஒரு பலவீனமாகவே திகழ்கிறது. அடிப்படையில் பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்காக சமுதாயம் பிரிக்கப்பட்டிருந்தது. சமுதாயத்தில் இந்த பிளவுகளால் வேறுபாடுகள் நிலவின. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் பிறப்பால் அடையாளப்படுத்தப்பட்ட பல்வேறு கிளை ஜாதிகளும் மலிந்திருந்தன.
இதற்கிடையே சமூக விழிப்புணர்வு இந்திய மக்களிடையே தோன்றியது. 19ஆம் நூற்றாண்டு சமூக, சமய சீர்திருத்த இயக்கங்களில் தீண்டாமை ஒழிப்பும் முக்கிய பிரச்னையாக முன்னிறுத்தப்பட்டது. மகாத்மா காந்தி
ஜோதிராவ் பூலே
தனது அபிவிருத்தி திட்டத்தில் தீண்டாமை ஒழிப்பையும் ஒரு பகுதியாக சேர்த்திருந்தார். 'ஹரிஜன்' என்ற செய்தி ஏட்டை நடத்திய அவர் 'ஹரிஜன் சேவக் சங்' என்ற அமைப்பையும் ஏற்படுத்தினார்.
டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதையும் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவே அர்ப்பணித்தார். இதற்காக, அவர் 1924ம் பம்பாயில் "பகிஷ்கிரிட் ஹிட்காரினி சபை' என்ற அமைப்பை உருவாக்கினார்.
ஸ்ரீநாராயண குரு
பின்னர், ஜாதிக் கொடுமையை எதிர்த்து 'அகில பாரதீய தலித் வர்க்க சபை' என்ற அமைப்பையும் தோற்றுவித்தார். மேற்கு இந்தியாவில் ஜோதிராவ் பூலே சத்ய சோதக் சமாஜத்தையும், கேரளாவில் ஸ்ரீநாராயணகுரு ஸ்ரீநாராயண பரிபாலனயோகம் என்ற அமைப்பையும் தோற்றுவித்து தாழ்த்தப்பட்ட மக்களிடையே சுயமரியாதை உணர்வை ஏற்படுத்தினர். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை மாகாணத்தில் ஈ.வெ.ரா. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி நடத்தினார்.ஜாதிக் கொடுமைகளை எதிர்த்து பல தனி நபர்களும் நிறுவனங்களும் போராடின. பொதுக் கிணற்றிலிருந்து தண்ணிர் எடுக்கத் தடை, கோயிலில் நுழையத் தடை, பள்ளிகளில் சேர தடை போன்ற ஹரிஐனங்களுக்கு இழைக்கப் பட்டுவந்த அநீதிகளை எதிர்த்து இப்போராட்டங்கள் நடைபெற்றன.