பண்டைய இந்தியாவில் விதவைகள் மறுமணம் வழக்கத்திலிருந்தது என்பதற்கு பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. காலப்போக்கில் இது கைவிடப்பட்டு, 19ஆம் நூற்றாண்டில் விதவைகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் பெருகியது.
இராஜா ராம்மோகன் ராய்
எனவே மீண்டும் விதவைகள் மறுமணத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டியது சமூக சீர்திருத்தவாதிகளின் முக்கிய கடமையாக இருந்தது. அக்கால பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் விதவைகள் மறுமணம் குறித்து கட்டுரைகள் எழுதிய இவர்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
இராஜா ராம்மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யா சாகர் இத்தகைய சீர்திருத்தவாதிகளில் குறிப்பிடத்தக்கவர்கள். புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள், பலர் கையெழுத்திட்ட விண்ணப்பங்கள் போன்ற பிரச்சார யுக்திகள் மூலமாக இவர்கள் விதவை மறுமணத்தை ஆதரித்து பெருமளவு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 1856 ஜூலையில் தலைமை ஆளுநர் ஆலோசனைக்குழு உறுப்பினரான ஜே.பி. கிராண்ட் என்பவர் விதவை மறுமணம் குறித்த சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தினார். 1856 ஜூலை 13ம் நாள் இது நிறைவேற்றப்பட்டது. 1856 ஆம் ஆண்டு விதவை மறுமணச் சட்டம் என்று இது அழைக்கப்பட்டது.
குழந்தை மணம்
குழந்தை மணம் என்பது இந்தியாவில் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த மற்றொரு அநீதியாகும், கேசவ சந்திர சென் என்பவரது முயற்சியால் 1870ல் இந்திய சீர்திருத்தகழகம் தோற்றுவிக்கப்பட்டது. 'மசாபாப் பாலவிவாகம்' என்ற இதழை பி.எம். மலபாரி என்பவர் தொடங்கி குழந்தை மணத்துக்கு எதிராகப் போராடினார். 1846ல் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது பெண்ணுக்கு 10 ஆக இருந்தது. 1891ல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி அது 12 ஆக உயர்த்தப்பட்டது. 1930 ஆண்டு சாரதா சட்டப்படி குறைந்தபட்ச வயது 14 ஆக உயர்த்தப்பட்டது. இந்திய விடுதலைக்குப்பிறகு அது 14லிருந்து 18 ஆக உயர்த்தப்பட்டது.