ஸம: ஷத்ரௌ ச மித்ரே ச ததா மாநாபமாநயோ:। ஷீதோஷ்ணஸுகது:கேஷு ஸம: ஸங்கவிவர்ஜித:॥ 12.18 ॥ துல்யநிந்தாஸ்துதிர்மௌநீ ஸம்துஷ்டோ யேந கேநசித்। அநிகேத: ஸ்திரமதிர்பக்திமாந்மே ப்ரியோ நர:॥ 12.19 ॥ |
எதிரி – நண்பன், மானம் – அவமானம், குளிர் – சூடு, சுகம் – துக்கம் போன்ற இருமைகளில் சமமாக இருப்பவன், பற்றற்றவன், புகழ்ச்சி, இகழ்ச்சி இரண்டையும் சமமாக கருதுபவன், மெளனமாக இருப்பவன், கிடைத்ததை கொண்டு திருப்தி அடைபவன், இருப்பிடம் இல்லாதவன், நிலைத்த அறிவு உடையவன், பக்தி உடையவன் எனக்கு பிரியமானவன்.
யே து தர்ம்யாம்ருதமிதம் யதோக்தம் பர்யுபாஸதே। ஷ்ரத்ததாநா மத்பரமா பக்தாஸ்தே அதீவ மே ப்ரியா:॥ 12.20 ॥ |
எந்த பக்தர்கள் சிரத்தையுடன் என்னையே கதியாக கொண்டு இங்கே கூறியது போல் இந்த அமுதம் போன்ற தர்மத்தை கடைபிடிக்கிறார்களோ அவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே பக்தியோகோ நாம த்வாதஷோ அத்யாய:॥ 12 ॥ |
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'பக்தி யோகம்' எனப் பெயர் படைத்த பன்னிரண்டாவது அத்தியாயம் நிறைவுற்றது.