அதிகாரம் 48
2 அவர் மக்களுக்குப் பஞ்சம் வரும்படி செய்தார். அவர்கள் தங்கள் பொறாமையால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள். அவர்களோ சொற்பப் பேர் ஆனார்கள். ஏனென்றால், அவர்களால் ஆண்டவருடைய கட்டளைகளைச் சகிக்கக் கூடவில்லை.
3 அவர் ஆண்டவருடைய வார்த்தையால் வானத்தை மூடினார்@ வானத்தினின்று மும்முறை நெருப்பு விழச் செய்தார்.
4 இவ்வாறே எலியாஸ் தம்முடைய புதுமைகளால் புகழ் பெற்றார். உம்மைப் போல மகிமை பாராட்டக் கூடியவன் யார்?
5 ஆண்டவரான கடவுளுடைய வார்த்தையால் இறந்தவனை மரணத் தீர்ப்பினின்றும் பாதாளத்தினின்றும் எழச் செய்தீர்.
6 மன்னர்களைக் கெடுதிக்குள் விழத்தாட்டினீர்@ எளிதாய் அவர்கள் வல்லமையை ஒடித்தீர்@ மகிமையில் வாழ்ந்தவர்களைப் படுக்கையில் வைத்தீர்.
7 சீனாயில் தீர்மானத்தைக் கேட்கிறீர். ஓரேபில் பழியின் தீர்ப்புகளைக் கேட்கிறீர்.
8 அரசரைத் தவம் செய்யும்படி அபிஷேகம் செய்கிறீர். உமக்குப் பின் இறைவாக்கினர்கள் வரும்படி செய்கிறீர்.
9 நெருப்புச் சுவாலையில் நெருப்புக் குதிரைகள் பூட்டின வண்டியில் எடுத்துக் கொள்ளப்பட்டீர்.
10 ஆண்டவருடைய கோபத்தைத் தணிக்கக் காலங்களின் தீர்மானங்களில் எழுதப்பட்டீர். தந்தையின் இதயத்தைப் பிள்ளையுடன் சமாதானப்படுத்தவும், யாக்கோபின் கோத்திரங்களைத் திரும்ப ஏற்படுத்தவும் நியமிக்கப்பட்டீர்.
11 உம்மைப் பார்த்தவர்கள் பேறுபெற்றோர். அவர்கள் உமது நேசத்தால் மகிமைப் படுத்தப்பட்டார்கள்.
12 ஏனென்றால், நாம் வாழ்வில் மட்டுமே வாழ்கிறோம். சாவுக்குப் பிறகோ நம் பெயர் அதைப் போல் இராது.
13 எலியாஸ் சுழல் காற்றால் மூடப்பட்டார். எலிசேயுசிடத்தில் அவருடைய கருத்து நிறைவு பெற்றது. தம் காலத்தில் தலைவர்க்கு அவர் அஞ்சியவரல்லர். வல்லமையில் ஒருவனும் அவரை வென்றவனல்லன்.
14 யாதொரு வார்த்தையும் அவரை மேற்கொள்ளவில்லை. இறந்த பின்பும் அவர் பிணம் இறைவாக்கு உரைத்தது.
15 அவர் தமது வாழ்நாளில் அற்புதங்களைச் செய்தார்@ மரணத்தின் போது புதுமைகளை ஆற்றினார்.
16 இவை யாவும் பார்த்தும் மக்கள் மனந்திரும்பவில்லை. தங்கள் நாட்டினின்று துரத்தப்பட்டு உலகம் முழுதும் சிதறடிக்கப்படும் வரையிலும் அவர்கள் தங்கள் பாவங்களை விட்டவர்களல்லர்.
17 சிலர் தாவீதின் கோத்திரத்தில் அதிகாரிகளாய் விடப்பட்டார்கள்.
18 அவர்களில் சிலர் கடவுளுக்கு விருப்பமானதைச் செய்தார்கள். சிலரோ பற்பல பாவங்களைச் கட்டிக் கொண்டார்கள்.
19 எசேக்கியாஸ் தம் நகரத்தைப் பலப்படுத்தினார்@ அதன் மத்தியில் தண்ணீர் கொண்டு வந்தார்@ இரும்பினால் பாறையைப் பிளந்தார்@ தண்ணீருக்காகக் கிணறு வெட்டினார்.
20 அவர் காலத்தில் சென்னாக்கெரிபு எழுந்து, ராப்சாசேனை அனுப்பினான்@ அவர்களுக்கு விரோதமாய்ப் போர் தொடுத்தான்@ சீயோனோடும் சண்டை செய்தான்@ தன் வலிமையில் செருக்குக் கொண்டான்.
21 அப்போது அவர்கள் இதயங்களும் கைகளும் அதிர்ந்தன. பிள்ளை பெறும் பெண்களைப் போல் அவர்கள் வாதை அடைந்தார்கள்.
22 இரக்கமுள்ள ஆண்டவரை மன்றாடினார்கள்@ கைகளை விரித்தார்கள்@ வானத்தை நோக்கித் தூக்கினார்கள். பரிசுத்த ஆண்டவரான கடவுள் அவர்கள் கூக்குரலை உடனே கேட்டார்.
23 அவர்கள் அக்கிரமங்களை அவர் நினைத்தவரல்லர். அவர்களை அவர் பகைவர்களுக்குக் கையளிக்கவில்லை. ஆனால், புனித இறைவாக்கினரான இசையாஸ் கையால் அவர்களைத் தூய்மைப்படுத்தினார்.
24 அசீரியருடைய படைகளை முறியடித்தார். ஆண்டவருடைய வானவர் அவர்களை அழித்தொழித்தார்.
25 ஏனென்றால், எசெக்கியாஸ் கடவுளுக்கு விருப்பமானதைச் செய்தார்@ தம்முடைய தந்தையாகிய தாவீதைப் பின்பற்றிப் பெரிய இறைவாக்கினராகிய இசையாசால் தமக்குக் காண்பிக்கப்பட்ட வழியில் உறுதியாய் நடந்தார்.
26 அவர் காலத்தில் சூரியன் பின்னால் போனது. அவர் அரசனுடைய வாழ்நாளை அதிகரித்தார்.
27 மிகுந்த அறிவினால் இறுதிக் காலங்களைக் கண்டார்@ சீயோனில் துக்கமுற்றவர்களைத் தேற்றினார்@ இறுதிக் காலம் வரையிலும் வரப்போகிறவைகளையும், நிகழ்வதற்கு முந்தியே மறைந்த காரியங்களையும் வெளிப்படுத்தினார்.