அதிகாரம் 47
2 தசையினின்று பிரிக்கப்பட்ட கொழுப்பைப் போல், இஸ்ராயேல் மக்களிடையே தாவீது இருந்தார்.
3 அவர் செம்மறிக் குட்டிகளோடு விளையாடுவது போலச் சிங்கங்களோடு விளையாடினார்@ தமது இளமையில் ஆட்டுக் குட்டிகளோடு நடந்து கொள்வது போலக் கரடிகளோடு நடந்து கொண்டார்.
4 அரக்கனை அவர் கொல்லவில்லையா? மக்களிடத்தினின்று நிந்தையை நீக்கிவிடவில்லையா?
5 அவர் கையைத் தூக்கிக் கவண் கல்லால் கோலியாத்தினுடைய அகந்தையைத் தாழ்த்தினார்.
6 ஏனென்றால், எல்லாம் வல்ல ஆண்டவரை மன்றாடினார். போரில் வீரனான மனிதனை அவர் கையளித்தார். அவர் மக்களின் கொம்பை உயர்த்தினார்.
7 இவ்வாறே பதினாயிரம் பேருக்குள்ளாக அவரை மகிமைப்படுத்தினார்@ அவருக்கு மகிமையின் முடியைக் கொடுத்து, ஆண்டவருடைய ஆசியால் அவரை வாழ்த்தினார்.
8 ஏனென்றால், எப்பக்கத்திலும் பகைவர்களை முறியடித்தார்@ எதிரிகளான பிலிஸ்தியரை இற்றைவரைக்கும் அழித்தொழித்தார்@ எப்போதுமே அவர்களுடைய அதிகாரத்தை ஒழித்தார்.
9 அவர் எல்லாக் காரியங்களிலும் பரிசுத்தருக்குத் துதி செய்தார்@ மகிமையின் வார்த்தையால் உன்னத கடவுளைப் புகழ்ந்தார்.
10 தம் முழு இதயத்தோடு ஆண்டவரைப் புகழ்ந்தார்@ தம்மை உண்டாக்கின கடவுளை நேசித்தார். அவருக்கோ பகைவருக்கு விரோதமாய் ஆண்டவர் அதிகாரம் கொடுத்தார்.
11 அவர் பீடத்திற்கு முன்பாகப் பாடகர் நிற்கும்படி செய்தார்@ அவர்களுடைய குரலால் இனிதான இராகங்களை எழுப்பினார்.
12 திருவிழாக்களில் ஆடம்பரத்தைப் புகுத்தினார். ஆண்டவருடைய புனித பெயரைத் துதிக்கவும், காலை முதல் கடவுளுடைய புனிதத்துவத்தை மேன்மைப்படுத்தவும் வாழ்வின் முடிவு வரையிலும் காலங்களை அலங்கரித்தார்.
13 ஆண்டவர் அவருடைய பாவங்களைப் பரிகரித்தார்@ அவர் அதிகாரத்தை எப்போதைக்கும் உயர்த்தினார்@ அரசின் உடன்படிக்கையையும், இஸ்ராயேலில் மகிமையின் அரியணையையும் அவருக்குக் கொடுத்தார்.
14 அவருக்குப் பிறகு ஞானியான அவர் மகன் எழுந்தார். அவர் பொருட்டுக் கடவுள் பகைவர்களின் எல்லா வல்லமையையும் ஒழித்தார்.
15 பகைவர் எல்லாரையும் கடவுள் சமாதானத்திற்கு உட்படுத்தின காலத்தில், தமது பெயரால் கடவுளின் ஆலயத்தைக் கட்டவும், எப்போதைக்கும் புனித இடத்தை ஏற்படுத்தவும் சாலமோன் ஆண்டு வந்தார். நீர் உமது இளமையில் எவ்வளவோ ஞானியாய் இருந்தீர்!
16 ஆற்றைப் போல ஞானத்தால் நிரப்பப்பட்டீர். உம்முடைய ஆன்மா பூமியைக் கவர்ந்து கொண்டது.
17 உவமைகளால் விடுகதைகளை நிரப்பினீர். வெகு தூரத் தீவுகளில் உமது பெயர் வெளியிடப்பட்டது. உமது சமாதானத்தால் நீர் நேசிக்கப்பட்டீர்.
18 உம் சங்கீதங்களிலும் பழமொழிகளிலும் உவமைகளிலும் விளக்கங்களிலும் மண்ணுலகம் வியப்படைந்தது.
19 இஸ்ராயேலின் கடவுளென்று பெயர் கொண்ட ஆண்டவரான கடவுளின் பெயரால்,
20 பொன்னைப் பித்தளையைப் பொலும், வெள்ளியை ஈயத்தைப் போலும் சேர்த்தீர்.
21 பிறகு பெண்களுக்கு உமது தொடையை வளைத்தீர்@ அவர்கள் உமது உடலில் அதிகாரம் செலுத்தும்படி விட்டு விட்டீர்.
22 உமது மகிமையில் மாசு உண்டு பண்ணினீர்@ உமது சந்ததியைக் கெடுத்தீர்@ உம் பிள்ளைகளின் மேல் தெய்வ கோபத்தை வருவித்தீர்@ உமது கெட்ட புத்தியைத் தூண்டிவிட்டீர்.
23 ஆதலால், அரசை இரண்டாகப் பிரித்தீர். எப்பிராயீம் கோத்திரத்தினின்று கொடிய ஆட்சி ஏற்பட்டது.
24 ஆனால், கடவுள் தமது இரக்கத்தை விடமாட்டார்@ தம் செயல்களைக் கெடுக்கவும் மாட்டார்@ அழிக்கவும் மாட்டார்@ தம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவருடைய கோத்திரத்தின் சந்ததியாரை அழித்தொழிக்கவும் மாட்டார்@ ஆண்டவரை நேசிப்பவருடைய சந்ததியையும் கெடுக்க மாட்டார்.
25 ஆனால், அவர் யாக்கோபுக்கு மீதியைக் கொடுத்தார்@ தாவீதுக்கும் அவர் குடும்பத்தில் சிலரை விட்டு வைத்தார்.
26 சாலமோன் தன் வாழ்க்கையை முடித்துத் தம் முன்னோரிடம் சேர்ந்தார்.
27 தமக்குப் பின் தம் சந்ததியில், மக்களில் மூடத்தனமும்,
28 விவேகக் குறைவுமுள்ள ரொபோவாமை விட்டார். அவனோ தன் தீய எண்ணத்தால் மக்களைக் கெடுத்தான்.
29 அவர் நாபாத் மகன் யெரோபோவாமையும் விட்டுச் சென்றார். அவனோ இஸ்ராயேல் பாவத்தில் விழும்படி செய்தான்@ எப்பிராயீமுக்குப் பாவ வழியைக் காண்பித்தான். அவர்களுடைய பாவங்களோ மிகுந்து போயின@
30 அவர்களைத் தங்கள் நாட்டினின்று வெகுதூரம் போகும்படி செய்தன.
31 தங்களுக்குத் தண்டனை வரும் வரையிலும் அவர்கள் எல்லா விதத் தீய நெறிகளையும் தேடினார்கள். ஆனால், கடவுள் எல்லாப் பாவங்களினின்றும் அவர்களை மீட்டார்.