1. மக்களிடையே பரந்த தேசிய விழிப்புணர்வை மிதவாதிகளால் உருவாக்க முடிந்தது.
2. ஜனநாயகம், சிவில் உரிமைகள், பிரதிநிதித்துவ நிறுவனங்கள் போன்ற சித்தாந்தங்களை அவர்கள் பிரபலப்படுத்தினார்கள்.
3. பிரிட்டிஷார் எவ்வாறு இந்தியர்களைச் சுரண்டுகிறார்கள் என்று அவர்கள் மக்களுக்கு புரியவைத்தனர். தாதாபாய் நௌரோஜி எழுதிய "இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்" என்ற நூலில் "செல்வச்சுரண்டல்" கோட்பாட்டை விளக்கியிருந்தார். இந்தியாவின் செல்வம் எந்தெந்த வழிகளில் இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை பட்டியலிட்டுக் காட்டினார்.
(அ) ஊதியங்கள்
(ஆ) சேமிப்பு
(இ) ஓய்வூதியங்கள்
(ஈ) இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் படைகளுக்கான செலவினங்கள்
(உ) பிரிட்டிஷ் வணிக நிறுவனங்களின் லாபம்
என்பவை அந்தப் பட்டியலில் அடங்கியிருந்தன. இதைப்பற்றி விசாரிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் லெல்பி குழுவை நியமித்தது. அதில் முதல் இந்திய உறுப்பினராக தாதாபாய் நியமிக்கப்பட்டார்.
4. ரானடே, கோகலே போன்ற ஒரு சில மிதவாதிகள் சமூக சீர்திருத்தங்களிலும் கவனம் செலுத்தினர். குழந்தை திருமணம், விதவைகளின் அவலம் போன்றவற்றை அவர்கள் எதிர்த்தனர்.
5. 1892 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில்கள் சட்டத்தின் வாயிலாக சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தியதும் மிதவாதிகளின் சாதனையாகும்.