குஜராத், மேவார், தக்காணம் ஆகியவற்றின் மீது அலாவுதீன் கில்ஜி மேற்கொண்ட படையெடுப்பு கள் குறிப்பிடத்தக்கவை. 1299ல் நுஸ்ரத்கான், உலுக்கான் இருவரையும் குஜராத்தைக் கைப்பற்றும்படி அனுப்பிவைத்தார். மன்னரும் அவரது மகளும் தப்பிவிட்ட போதிலும், அரசி மட்டும் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குஜராத் படையெடுப்பின்போதுதான் காபூர் என்ற அலி கைப்பற்றப்பட்டு டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டான். அவனுக்கு மாலிக் நாயப் பதவி வழங்கப்பட்டது. 1301ல் அலாவுதீன் கில்ஜி ராந்தம்பூருக்கு எதிராக போர் தொடுத்தார். மூன்று மாத முற்றுகைக்குப்பின் அது வீழ்ந்தது. ரஜபுத்திரப் பெண்கள் 'ஐவுஹர்' என்ற வழக்கப்படி தீக்குளித்து மாண்டனர்.
ராணி பத்மினி
அலாவுதீனின் அடுத்த இலக்கு சித்தூர். ராஜஸ்தானில் வலிமையான அரசு அது. ராஜா ரத்தன்சிங்கும் அவனது வீரர்களும் வீரத்துடன் போரிட்டனர். ஆனால் அடிபணிந்தனர். ராணி பத்மினி உள்ளிட்ட ரஜபுத்திர மகளிர் தீக்குளித்தன. பத்மினி கதையை பத்மாவத் என்ற நூலில் ஜெயசி அழகாக விளக்கியுள்ளார்.
அலாவுதீன் கில்ஜியின் தக்காணப் படையெடுப்பும் தென்னிந்திய வெற்றிகளும் குறிப்பிடத்தக்கவை. தெற்கில் நான்கு முக்கிய அரசுகள் இருந்தன. தேவகிரி யாதவர்கள், வாரங்கல் காகதீயர்கள், துவார சமுத்திரத்தில் ஹோய்சளர்கள் மற்றும் மதுரைப் பாண்டியர்கள். தேவகிரி அரசர் ராமச்சந்திர தேவருக்கு எதிராக மாலிக் காபூரை அலாவுதீன் கில்ஜி அனுப்பி வைத்தார். அடிபணிந்த அந்நாட்டு அரசர் ஏராளமான செல்லத்தை திறையாகவும் செலுத்தினார். 1309ல் மாலிக் காபூர் வாரங்கல் மீது படையெடுத்தார். அதன் அரசர் பிரதாப ருத்ரதேவன் முறியடிக்கப்பட்டான். ஏராளமான செல்லம் கைப்பற்றப்பட்டது. மாலிக் காபூரின் அடுத்த இலக்கு துவார சமுத்திர அரசன் மூன்றாம் வீரவல்லாளன். அவனும் தோற்கடிக்கப்பட்டு பெருத்த செல்வம்
அலை தர்வாசா
கைப்பற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாலிக் காபூர் பின்னர் மதுரை மீது படையெடுத்தார். தலைநகர் மதுரையைவிட்டு வீரபாண்டியன் தப்பியோடினான். காபூர் பெரும் செல்வத்தை கைப்பற்றி எடுத்துக் கொண்டு டெல்லி திரும்பினார்.
1316ல் அலாவுதீன் கில்ஜி இறந்தார். அவர் எழுத்தறிவில்லாதவராக இருந்த போதிலும் அமீர் குஸ்ரு, அமீர் ஹாசன் போன்ற கவிஞர்களை ஆதரித்தார். புதிய தலைநகர் சீரி மற்றும் புகழ்வாய்ந்த நுழைவாயிலான 'அலை தர்வாசா' என்ற கட்டிடத்தையும் அவர் கட்டினார். அலாவுதீன் கில்ஜியைத் தொடர்ந்து முபாரக் ஷா, குஸ்ருஷா இருவரும் ஆட்சிக்கு வந்தனர். திபல்பூரின் ஆளுநரான காஸி மாலிக், குஸ்ருஷாவைக் கொன்றுவிட்டு 1320ல் கியாசுதீன் துக்ளக் என்ற பட்டத்துடன் டெல்லி அரியணையேறினார்.