இந்தியாவில் முஸ்லீம் பேரரசு அதன் உச்சகட்டத்தை தொட்டது கில்ஜிகளின் ஆட்சிக் காலத்தில்தான். கில்ஜி வம்சத்தை நிறுவியவர் ஜலாலுதீன் கில்ஜி. ஆட்சிக்கு வந்தபோது அவருக்கு வயது எழுபது. கருணை மனம் படைத்தவர். பால்பனின் மருமகனான மாலிக் சஜ்ஜூ என்பவரை காராவின் ஆளுநராக தொடர்ந்து இருக்க அவர் அனுமதித்தார். அவரது தாரளமனதை சஜ்ஜூ தவறாகப் புரிந்து கொண்டார். சஜ்ஜூ கலகத்தில் இறங்கியபோது, கலகத்தை ஒடுக்கிய ஜலாலுதீன் அவரை மன்னிக்கவும் செய்தார். தக்கர்கள் நாட்டை கொள்ளையடித்து வந்தனர். அவர்களைக் கைப்பற்றிய சுல்தான் எச்சரித்து, மன்னித்து, விடுதலை செய்தார். 1292ல் மாலிக் சஜ்ஜூ இரண்டாம் முறையாக கிளர்ச்சியிலீடுபட்டபோது அவரை நீக்கிவிட்டு தனது மருமகன் அலாவுதீன் கில்ஜியை காராவின் ஆளுநராக நியமித்தார். 1296ல் அலாவுதீன் கில்ஜி தேவகிரிமீது படையெடுத்து ஏராளமான செல்வத்துடன் காரா திரும்பினார். அப்போது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் கலந்து கொண்ட மாமனாரும் சுல்தானுமான ஜலாலுதீன் கில்ஜியை சதிசெய்து கொன்றுவிட்டு அலாவுதீன் கில்ஜி டெல்லி அரியணையக் கைப்பற்றினார்.
அலாவுதீன் கில்ஜி (1296 - 1316)
அலாவுதீன் கில்ஜி |
அலாவுதீன் கில்ஜியின் சீர்திருத்தங்கள்
அலாவுதீன் கில்ஜி நிலையான பெரும்படையை வைத்திருந்தார். படைவீரர்களுக்கு ஊதியம் அரசுக் கருவூலத்திலிருந்து பணமாக செலுத்தப்பட்டது. பெரிஷ்டாவின் கூற்றுப்படி அலாவுதீன் கில்ஜி 4,75,000 குதிரை வீரர்களை பணியில் அமர்த்தியிருந்தார். குதிரைகளுக்கு 'தாக்' எனப்படும் சூடுபோடும் முறையையும் அவர் அறிமுகப்படுத்தினார். ஹூலியா என்ற படை வீரர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டது. அதிகபட்ச திறமையை உறுதிப்படுத்தும் பொருட்டு, ராணுவத்தின் அமைப்பு அவ்வப்போது திருத்தியமைக்கப்பட்டது.