அந்த ஆடையை வாரி எடுத்த சுதாஸ், கண்ணீர் ததும்பி வழியும்
தன்னுடைய கண்களிலே ஒத்திக்கொண்டான்; மார்போடு அணைத்துக் கொண்டான். அபாலாவினுடைய சரீரத்தின் நறுமணத்தை அந்த ஆடைகளிலே கண்டான்.
____________________________________________________
* இன்றைக்கு 144 தலைமுறைகளுக்கு முந்திய ஆரிய சமூகத்தின் கதை இது. அந்தக் காலத்தில்தான் வசிட்டர், விசுவாமித்திரர், பரத்துவாஜர் முதலிய மகரிஷிகள் ருக் வேத மந்திரங்களை இயற்றினர். அதே காலத்தில் தான் ஆரிய புரோகிதர்களுடைய உதவியைக் கொண்டு குரு பாஞ்சால ஆரிய சேனைத் தலைவர்கள், ஜன சமூகத்தின் உரிமைகளைப் பலமாகத் தாக்கி இறுதியாக அழித்து முடித்தார்கள்.