அதிகாரம் 5
2 அவர்கள் அவனைக் கண்டு மிகுந்த அச்சத்தால் நடுநடுங்குவர்@ எதிர்பாரா வகையில் அவன் மீட்கப்பட்டதை எண்ணி வியப்படைவர்.
3 மனம் வருந்தி ஒருவரோடொருவர் பேசிக் கொள்வார்கள், உள்ளத்தில் வேதனையடைந்து பெருமூச்செறிந்து சொல்வார்கள்:
4 இவனையல்லவா நாம் முன்பெல்லாம் ஏளனம் செய்தோம்! வசைமொழிக்கு இலக்காய்ச் செய்தோம்! அறிவிலிகள் நாம்! அவனுடைய வாழ்வை நாம் மடமை என்று எண்ணினோம், அவன் முடிவு இழிவானதென்று நினைத்தோமே!
5 கடவுளின் புதல்வர்களுள் அவனுக்கு இடம் கிடைத்ததெப்படி? பரிசுத்தர்களோடு அவனுக்குப் பங்கு கிடைத்ததெவ்வாறு?
6 உண்மை நெறியை விட்டகன்று நாம் அலைந்து திரிந்தோம், நீதியின் ஒளி நம்மேல் ஒளிராமல் போயிற்று, அறிவுக் கதிரவன் நமக்கு உதயமாகவில்லை!
7 அக்கிரமமும் அழிவும் நிறைந்த வழியில் மனமார நாம் நடந்தோம், பாதையில்லாப் பாலை நிலைங்களில் பயணம் செய்தலைந்தோம், ஆனால் ஆண்டவரின் வழியை நாம் அறிந்தோமில்லை.
8 நமது இறுமாப்பினால் நமக்கு கிடைத்த பலனென்ன? செல்வப் பெருக்கினால் நமக்கு விளைந்த நன்மைதான் என்ன?
9 இவையெல்லாம் நிழலைப் போல் ஒடி மறைந்தன, பறந்தோடும் வதந்தியைப் போல் கடந்து போயின@
10 அலைந்தாடும் நீர்ப்பரப்பில் செல்லும் கலம் போலக் கடந்து போகவே, கடந்து சென்ற சுவடு கூடக் காணப்படவில்லை, அலைகளைக் கிழித்துச் சென்ற பாதையும் புலப்படவில்லை@
11 அல்லது, வானத்தில் பறந்தோடும் பறவை போன்றது: அது கடந்து போன வழி நம் கண்களுக்குத் தெரிவதில்லை@ அது இறக்கைகளை அடிக்கும் போது மென்காற்று மோதப்படுகிறது, அது பறந்தோடும் விரைவில் காற்றைத் கிழித்துச் செல்கிறது@ இறக்கைகளை அசைத்துக் காற்றைத் தள்ளிப் பறக்கிறது, ஆனால் பறந்து சென்ற பின் போன வழியே புலனாவதில்லை@
12 அல்லது, இலக்கை நோக்கி எய்யப்படும் அம்பைப் போன்றது: அம்பின் பாய்ச்சலால் பிளவுபட்ட காற்று உடனே கூடி விடுகிறது@ ஆகவே அது போன வழியை யாரும் காணமுடியாது.
13 நம்முடைய நிலைமையும் அப்படிப்பட்டதே: பிறந்த உடனேயே நாம் இறந்துபட்டோம், நற்பண்பின் அடையாளத்தை நாம் விட்டுச் செல்லவில்லை, நம் தீமையில் நாம் அழிந்துபோனோம்."
14 இவ்வாறு பாவிகள் நரகத்தில் சொல்லிக் கொள்கிறார்கள்.
15 பொல்லாதவர்களின் நம்பிக்கை காற்றிலகப்பட்ட பஞ்சு போன்றது@ புயலால் சிதறடிக்கப்பட்ட நுரை போன்றது@ காற்றால் விரட்டப்படும் புகை போல் கலைந்தோடிவிடும், ஒரே நாள் விருந்தினனைப் போல் மறக்கப்பட்டு விடும்.
16 நீதிமான்களோ என்றென்றும் வாழ்கிறார்கள், அவர்களுக்குரிய கைம்மாறு ஆண்டவரிடம் உள்ளது, உன்னதர் அவர்கள் மேல் அக்கறை கொண்டுள்ளார்.
17 ஆதலால் மகிமையான மணிமுடியையும் அழகான மகுடத்தையும், ஆண்டவர் கையிலிருந்து அவர்கள் பெற்றுக் கொள்வர்@ அவருடைய வலக்கை அவர்களை அணைக்கும், அவருடைய கைவன்மை கேடயம் போல் பாதுகாக்கும்.
18 தம் வைராக்கியத்தைப் படைக்கலமாய் அவர் பூண்டு கொள்வார், தம் பகைவர்களைப் பழிவாங்கப் படைப்புகளையும் போர்க்கோலம் பூணச் செய்வார்.
19 நீதியைத் தம் மார்புக் கவசமாய் அணிந்து கொள்வார், நடுவுநிலை தவறாத தீர்மானத்தைத் தலைச்சீராவாகப் போட்டுக்கொள்வார்.
20 ஊடுருவ முடியாத கேடயமாகப் பரிசுத்ததனத்தால் தம்மை மூடிக்கொள்வார்.
21 ஆற்றவியலாத தமது சினத்தை வேலாகத் தீட்டிக் கொள்வார், அவரோடு சேர்ந்து உலகெலாம் அறிவிழந்தவர்களை எதிர்த்துப் போரிடும்.
22 மின்னல் படைகள் குறி தவறாமல் பாய்ந்து சென்று அடிக்கும், திட்டமாய் வளைக்கப்பட்ட வில்லினின்று தெறிக்கும் அம்பு போல, மேகங்களினின்று அவை தாவிச் சென்று இலக்கைத் தாக்கும்.
23 கவண் வீசியெறியும் கற்களைப் போல் அவர்கள் மேல் கடுஞ்சினம் நிறைந்த கல்மாரி பொழியப்படும், கடல் நீர் அவர்களைக் கடுமையான சீற்றத்தோடு எதிர்க்கும், ஆறுகளும் இரக்கமின்றி அவர்களைத் தாக்கும்.
24 சூறாவளி அவர்களுக்கு எதிராக எழும்பும்@ கடும்புயல் போல் அவர்களைத் தூற்றிச் சிதறடிக்கும்@ அக்கிரமம் மண்ணுலகம் முழுவதையும் பாழாக்கும்@ தீச்செயல் அரசர்களின் அரியணைகளைக் கவிழ்த்து விடும்.