சங்கீதம் 150
2 அவருடைய மாண்பு மிக்க செயல்களை நினைத்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: அவரது உன்னத மாட்சியை நினைத்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.
3 எக்காளத் தொனி முழங்க அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: வீணையுடன் யாழ் இசைத்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.
4 முரசொலித்து, நடனம் செய்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: நரம்பிசைத்து, குழல் ஊதி அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.
5 நாதமிகு தாளத்துடன் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: கைத்தாள ஒலி முழுங்க அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.
6 உயிருள்ளதெல்லாமே அவரைப் புகழ்ந்தேத்துவதாக. அல்லேலூயா!