அதிகாரம் 16
2 கைத்தாள ஒலி முழங்க அவரைப் புகழ்ந்தேத்துங்கள்@ அவருக்குப் புதியதொரு பண் இசைத்து அவருடைய திருப்பெயரைக் கூவி அழையுங்கள்.
3 போர்களை அழிப்பவர் ஆண்டவரே.
4 ஆண்டவர் என்பது அவர் பெயராம். நம் பகைவர் அனைவர் கையினின்றும் நம்மை மீட்கத் தம் மக்களிடையே அவர் குடிகொண்டார்.
5 வடநாட்டு மலைகளிலிருந்து அசீரியர் பேராற்றலுடன் இறங்கி வந்தனர். அவர்களது படை ஆறுகளை நிரப்பிற்று" அவர்கள் தம் குதிரைகள் பள்ளத்தாக்குகளை நிரப்பின.
6 அசீரியன், ~இதோ உன் நாட்டைத் தீக்கிரையாக்குவேன்@ உன் இளைஞரை வாளுக்கு இரையாக்குவேன்@ உன் சிறுவர்களைக் கொன்றொழிப்பேன்@ கன்னிப் பெண்களைச் சிறைபிடிப்பேன்~ என்றான்.
7 எல்லாம் வல்ல ஆண்டவரோ, அவனைத் தாக்கி, ஒரு பெண் கையில் ஒப்படைத்து, அவனை வெட்டி வீழ்த்தினார்.
8 பேராற்றல் படைத்த அவனை இளைஞர் வெட்டி வீழ்த்தவில்லை@ தீத்தான் புதல்வரும் அவனைக் கொல்லவில்லை. ஆற்றல் படைத்த அரக்கரும் அவனை எதிர்த்து நிற்கவில்லை. ஆனால் மேராரியின் மகள் யூதித்தே தன் முக அழகால் அவனை அழித்தொழித்தாள்,
9 அவள் கைம்பெண்ணுக்குரிய ஆடையைக் களைந்தாள்@ இஸ்ராயேல் மக்களின் மகிழ்ச்சிக்குரிய ஆடையை அணிந்தாள்.
10 நறுமண எண்ணெய்யை முகத்தில் பூசினாள். சீவி முடித்துத் தலைப்பட்டை அணிந்தாள். அவனை மயக்கத் தக்க மேலாடை தரித்தாள்.
11 அவளுடைய காலணிகள் அவன் கண்களை மயக்கின@ அவளுடைய அழகு வதனம் அவன் உள்ளத்தை கவர்ந்தது@ அவளோ ஒரு வாளால் அவனது தலையைக் கொய்தாள்.
12 பாரசீகர் அவளுடைய மனவுறுதியைக் கண்டு அஞ்சினர்@ மேதியர் அவளுடைய அஞ்சாமையைக் கண்டு நடுங்கினர்.
13 தாகத்தால் தவித்து நின்றனர் என் சிறியோர்@ அவர்களைக் கண்ட அசீரியர் தம் கூடாராத்தில் பெரும் கூச்சலிட்டனர்.
14 என் பணிப் பெண்களின் மக்கள் அவர்களைக் குத்தினர்@ தப்பி ஓடும் சிறுவர்களைப் போன்று அவர்களைக் கொன்றனர்@ என் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் அவர்கள் போர்க்களத்தில் மடிந்தனர்.
15 ஆண்டவரைப் புகழ்வோம். நம் கடவுளுக்குப் புதியதொரு பண் இசைப்போம்.
16 ஆதோனாய், ஓ ஆண்டவரே, நீர் பெரியவர்! பேராற்றல் படைத்தவர்! எவராலும் மேற்கொள்ள முடியாதவர்!
17 உம் படைப்புகள் அனைத்தும் உமக்கு ஏவல் புரியட்டும். ஏனெனில், உமது சொல்லால் அவை உருவாயின. நீர் உம் ஆவியை அனுப்பினீர்@ அவை படைக்கப்பட்டன. உமது சொல்லை எதிர்த்து நிற்பவன் யார்?
18 நீர்ப்பெருக்கால் மலைகள் அடிபெயரும். உம் திருமுன் பாறைகள் மெழுகென உருகிவிடும்.
19 உமக்கு அஞ்சுவோர் எல்லாவற்றிலும் உம்மால் மேன்மை பெறுவர்.
20 என் மக்களுக்கு எதிராக எழும்புவோருக்கு ஐயோ கேடு! ஏனென்றால் எல்லாம் வல்ல ஆண்டவர் அவர்களப் பழிவாங்குவார்@ தீர்வைநாளில் அவர்களைத் தண்டிப்பார்.
21 அவர் நெருப்பையும் புழுக்களையும் அவர்கள் உடல் மீது அனுப்புவார். அதனால் அவர்கள் என்றென்றும் உழன்று வேதனைப்படுவர் என்று பாடி முடித்தாள்.
22 வெற்றிக்குப்பின் மக்களெல்லாரும் ஆண்டவரைத் தொழுவதற்காக யெருசலேமுக்கு வந்தனர். தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு யாவரும் தகனப் பலிகளையும், தாங்கள் செய்து கொண்ட நேர்ச்சைகளையும், காணிக்கைகளையும் செலுத்தத் தொடங்கினர்.
23 அப்பொழுது யூதித் மக்கள் தனக்குக் கொடுத்திருந்த ஒலொபெர்னெசின் படைக்கருவிகள் அனைத்தையும் தானே கூடாரத்திலிருந்து எடுத்து வந்திருந்த பாலிகைத் திரையையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தாள்.
24 மக்களோ நிகழ்ந்தவற்றையெல்லாம் கண்டு களித்த வண்ணம் மூன்று மாதமாய் யூதித்தோடு வெற்றி விழாக் கொண்டாடினர்.
25 அதன்பின் அவர்கள் அனைவரும் தத்தம் இல்லம் ஏகினர். யூதித்தோ பெத்தூலியாவில் பெருமை பெற்றாள். இஸ்ராயேல் நாடெங்கும் அவள் புகழ் ஓங்கியது.
26 அவள் வீராங்கனை என்றும் மாபத்தினி என்றும் புகழப் பெற்றாள். ஏனெனில் தன் கணவன் மனாசேஸ் இறந்த நாள் முதல் தன் வாழ்நாள் முழுவதும் யூதித் ஆண் தொடர்பு அறியாதிருந்தாள்,
27 அவள் திருநாட்களிலே மக்களால் சிறந்த விதமாய்ப் போற்றப்படுவாள்.
28 அவள் தன் கணவன் வீட்டில் நூற்றைந்து ஆண்டுகள் தங்கியிருந்தாள். தன் பணிப்பெண்ணுக்கு உரிமை கொடுத்து அவளை அனுப்பி வைத்தாள். பின் அவள் உயிர் துறந்தாள்@ பெத்தூலியாவில் தன் கணவனோடு அடக்கம் செய்யப்பட்டாள்.
29 எல்லா மக்களும் ஏழு நாட்கள் அவளைக் குறித்துத் துக்கம் கொண்டாடினர்.
30 அவள் வாழ்நாள் முழுவதும், அவள் இறந்த பின் பல ஆண்டுகளும் இஸ்ராயேலைத் துன்புறுத்த எவனும் துணியவில்லை.
31 இந்த வெற்றியின் நாள் பரிசுத்த நாட்களில் ஒன்றாக எபிரேயரால் கருதப்பட்டது@ அன்று முதல் இந்நாள் வரை, யூதர்களால் திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.