அதிகாரம் 12
2 அமோறையரின் அரசனான செகோன் எசெபோனில் வாழ்ந்து வந்தான். இவனுடைய அரசு ஆர்னோன் ஆற்றங்கரையிலிருந்த ஆரோயேர் நகர் துவக்கி ஆற்றங்கரை நடுவிலுள்ள பள்ளத்தாக்கிலும், பாதிக் கலயாத்திலும், அம்மோன் மக்களுடைய எல்லையாகிய ஜாபோக் என்ற ஆறுவரையும் பரவியிருந்தது.
3 (மற்றொரு பக்கம்) பாலைவனம் முதல் கிழக்கேயுள்ள கெனரோத் கடல் வரையும், பெத்சிமோத்துக்குப் போகும் வழியாய்க் கீழ்த்திசையிலிருக்கிற பாலைவனக் கடலாகிய உப்புக் கடல் வரையும், தென்புறத்தில் அசெரோத் பஸ்காவுக்குத் தணிவாக உள்ள நாடு வரையும் பரவியிருந்தது.
4 பாசானின் அரசன் ஓகு. இவன் இராபாயீம் இனத்தவன். அஸ்தரோத்திலும் எதிராயிலும் வாழ்ந்து வந்தான். இவன் எர்மோன் மலையிலும் சலோக்காவிலும்,
5 ஜெசூரி, மாக்காத்தி, ஏசேபோனின் அரசனான செகோனுடைய எல்லையாகிய பாதிக் கலயாத் வரை ஆண்டு வந்தான்.
6 இவ்விரு அரசர்களை ஆண்டவரின் அடியானான மோயீசனும் இஸ்ராயேல் மக்களும் அவர்கள் நாட்டை ரூபானியருக்கும், காதியருக்கும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும் சொந்தமாகக் கொடுத்திருந்தார்.
7 யோர்தானுக்கு இப்புறத்தில் மேற்றிசையிலுள்ள லிபானின் நாட்டிலிருக்கும் பால்காத் முதல் செயீருக்குப்போகும் வழியாகிய மலைப்பகுதி வரையுள்ள நாட்டை யோசுவாவும் இஸ்ராயேல் மக்களும் கைப்பற்றிய பின், யோசுவா கோத்திரங்களின் படி அதைப் பங்குப் பங்காய்ப் பிரித்து இஸ்ராயேலருக்குச் சொந்தமாகக் கொடுத்துவிட்டார்.
8 அந்த நாட்டிலும், அதன் மலைகளிலும் சமவெளிகளிலும் வெளிநிலங்களிலும் அசெரோத்திலும் பாலைவனத்திலும், தென்புறத்திலும் ஏத்தையர், அமோறையர், கானானையர், பெரேசையர், ஏவையர், ஏபுசேயர் குடியிருந்த நாட்டிலும், யோசுவாவால் தோற்கடிக்கப்பட்ட அரசர்கள் விவரம் பின்வருமாறு:
9 எரிக்கோவின் அரசன் ஒருவன்@ பேத்தலுக்குச் சமீபமான ஆயியின் அரசன் ஒருவன்.
10 யெருசலேமின் அரசன் ஒருவன்@ எபிரோனின் அரசன் ஒருவன்.
11 யெரிமோத்தின் அரசன் ஒருவன்@ லாக்கீசின் அரசன் ஒருவன்.
12 ஏகிலோனின் அரசன் ஒருவன்@ காஜேரின் அரசன் ஒருவன்.
13 தாபீரின் அரசன் ஒருவன்@ காதேரின் அரசன் ஒருவன்.
14 ஏர்மாவின் அரசன் ஒருவன்@ ஏரோத் அரசன் ஒருவன்.
15 லெப்னாவின் அரசன் ஒருவன்@ ஓதுலாமின் அரசன் ஒருவன்.
16 மசேதாவின் அரசன் ஒருவன்@ பேத்தலின் அரசன் ஒருவன்.
17 தாபுவாவின் அரசன் ஒருவன்@ ஓபேரின் அரசன் ஒருவன்.
18 ஆப்போக்கின் அரசன் ஒருவன்@ சாரோனின் அரசன் ஒருவன்.
19 மாதொனின் அரசன் ஒருவன்@ ஆஜோரின் அரசன் ஒருவன்.
20 செமேரோனின் அரசன் ஒருவன்@ ஆக்சாபின் அரசன் ஒருவன்.
21 தேனாக்கின் அரசன் ஒருவன்@ மகெதோவின் அரசன் ஒருவன்.
22 காதேசின் அரசன் ஒருவன்@ கர்மேலுக்கடுத்த யக்கனானின் அரசன் ஒருவன்.
23 தோர் நகரிலும், தோர் என்னும் நாட்டிலும் ஆண்ட அரசன் ஒருவன்@ கல்காவின் இனத்தாருடைய அரசன் ஒருவன்.
24 தேர்சாவின் அரசன் ஒருவன். ஆக இவர்கள் எல்லாரும் முப்பத்தொரு அரசர்களாம்.