அதிகாரம் 21
2 அத்தூதுவர் வந்து அவரிடம், "நபுக்கோதனசார் அரசன் நமக்கு எதிராகப் படையெடுத்து வந்துள்ளான்@ ஆண்டவர் ஒருகால் தம் வியத்தகு செயல்களுக்கேற்றவாறு நமக்கு உதவி செய்து, அவன் நம்மிடமிருந்து பின்வாங்கிப் போகச் செய்வார்@ இதுபற்றி ஆண்டவரைக் கேட்டுச் சொல்" என்று சொன்னார்கள்.
3 அப்போது எரெமியாஸ் அவர்களுக்குக் கூறிய மறுமொழி:
4 நீங்கள் போய்ச் செதேசியாஸ் மன்னனுக்குப் பின்வருமாறு சொல்லுங்கள்: ~இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: மதில்களைச் சூழ்ந்து முற்றுகையிட்டு உங்களை வளைத்து நிற்கும் பபிலோனிய அரசனோடும், கல்தேயரோடும் நீங்கள் போராடுவதற்குப் பயன்படுத்தும் போர்க் கருவிகளை உங்களுக்கு விரோதமாகவே திருப்புவோம்@ அவற்றை இந்நகரத்துக்குள் வரச் செய்வோம்.
5 நமது கரத்தை நீட்டி, நம் வல்லமையைக் காட்டிச் சினத்தோடும் ஆத்திரத்தோடும் பெருங் கோபத்தோடும் நாமே உங்களுக்கு விரோதமாய்ப் போராடுவோம்@
6 இப்பட்டணத்தின் குடிகளை நையப் புடைப்போம்@ மனிதர்களும் மிருகங்களும் கொள்ளை நோயால் மடிவார்கள்@
7 அதன் பின், யூதாவின் அரசனான செதேசியாசையும், அவனுடைய ஊழியரையும், மக்களையும், இன்னும் இப்பட்டணத்தில் கொள்ளை நோய், வாள், பஞ்சம் இவற்றுக்குத் தப்பினவர்களையும், பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசார் கையிலும், அவர்களுடைய பகைவர்களின் கையிலும், அவர்களின் உயிரைப் பறிக்கத் தேடுகிறவர்கள் கையிலும் நாம் ஒப்புவிப்போம்@ அவன் அவர்களை வாளுக்கு இரையாக்குவான்@ அவர்கள் மேல் மனம் இளக மாட்டான்: அவர்களை மன்னிக்கவும் மாட்டான்@ அவர்களுக்கு இரக்கம் காட்டவும் மாட்டான், என்கிறார் ஆண்டவர்.~
8 மேலும் அந்த மக்களுக்கு இவ்வாறு அறிவி: ~ஆண்டவர் கூறுகிறார்: இதோ உங்களுக்கு முன் இரண்டு வழிகளைக் காட்டுகிறோம்: ஒன்று, வாழ்வின் வழி@ மற்றது, சாவின் வழி.
9 இப்பட்டணத்தில் தங்கி விடுபவன் வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் மடிவான்@ ஆனால் வெளியேறி உங்களை முற்றுகையிட்டு வளைத்துக் கொண்டிருக்கும் கல்தேயரிடம் சரணடைபவன் உயிர் வாழ்வான்@ அவன் உயிர் அவனுக்குப் போரில் கிடைத்த கொள்ளைப் பொருளாகும்.
10 இப்பட்டணத்தின் மீது நன்மையை அல்ல, தீமையையே வரச் செய்யத் தீர்மானிக்கிறோம்@ அது பபிலோனிய அரசன் கையில் ஒப்புவிக்கப்படும்@ அதனை அவன் நெருப்பினால் சுட்டெரிப்பான், என்கிறார் ஆண்டவர்.~
11 "யூதாவின் அரச குடும்பத்திற்கும் சொல்: ~ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்:
12 தாவீதின் வீடே, ஆண்டவர் கூறுகிறார்: காலை நேரத்திலேயே நீதி செலுத்துங்கள், கொள்ளையடிக்கப் பட்டவனை ஒடுக்குபவன் கையினின்று விடுதலை செய்யுங்கள்@ இல்லையேல், நமது கோபம் நெருப்புப் போல மூண்டெழும்பும்@ உங்கள் தீய செயல்களின் காரணமாய் இது பற்றியெரியும்@ அதை அணைக்க யாராலும் இயலாது.~
13 பள்ளத்தாக்கில் இருக்கும் பட்டணமே, சமவெளியில் அமைந்திருக்கும் கற்பாறையே, ~நமக்கெதிராய் வருபவன் யார்? நம் வீடுகளில் நுழைபவன் யார்?~ என்கிறாயே, இதோ, நாமே உனக்கு எதிராய் வருகிறோம், என்கிறார் ஆண்டவர்@
14 உங்கள் செயல்களின் பலனுக்கேற்றவாறு உங்களைத் தண்டிப்போம்@ யெருசலேமின் காட்டில் நெருப்பை மூட்டுவோம், அதைச் சுற்றியுள்ள அனைத்தையும் அது சுட்டெரிக்கும், என்கிறார் ஆண்டவர்."
