அதிகாரம் 14
2 இஸ்ராயேலே, உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா, ஏனெனில் உன் அக்கிரமத்தினாலேயே நீ வீழ்ச்சியுற்றாய்,
3 வாய் விட்டுச் சொல்லி ஆண்டவரிடம் திரும்புங்கள்: "அக்கிரமங்களை எல்லாம் அப்புறப்படுத்தியருளும், நன்மையானதை ஏற்றுக்கொள்ளும், உதடுகளால் தரும் காணிக்கையை உமக்களிக்கிறோம்@ அசீரியர் எங்களைக் காக்க மாட்டார்கள்,
4 குதிரைகள் மேல் நாங்கள் இனி ஏற மாட்டோம்@ எங்கள் கைவேலைப்பாடுகளை நோக்கி, ~எங்கள் இறைவா!~ என்று சொல்ல மாட்டோம்@ ஏனெனில் திக்கற்ற பிள்ளைக்குப் பரிவு காட்டுபவர் நீரே" என்று ஆண்டவரிடம் சொல்லுங்கள்.
5 அவர்களுடைய பிரமாணிக்கமின்மையை நாம் குணமாக்குவோம், அவர்கள் மேல் உளமார அன்பு கூர்வோம்@ ஏனெனில் அவர்கள் மேலிருந்த நம் சினம் ஆறி விட்டது,
6 நாம் இஸ்ராயேலுக்குப் பனி போல இருப்போம், அவன் லீலியைப்போலத் தளிர்ப்பான், லீபானைப்போல வேரூன்றி நிற்பான்.
7 அவனுடைய கிளைகள் நீண்டு படரும். ஒலிவ மரம் போல் அவன் அழகு இருக்கும்@ லீபானைப்போல் அவன் நறுமணம் பரப்புவான்.
8 நமது நிழலில் வாழ அவர்கள் திரும்பி வருவர், வளமான தானியமும் திராட்சையும் பயிரிடுவர், லீபானின் திராட்சை இரசம் போல் அவர்களது புகழ் விளங்கும்
9 இனிமேல் எப்பிராயீமுக்குச் சிலைகள் எதற்கு? நாமே அவனுக்குச் செவி சாய்த்துக் கண்காணிக்கிறோம்@ பசுமையான தேவதாரு மரம் போல் இருக்கிறோம்@ நீ கனிகொடுப்பது நம்மால் தான்.
10 ஞானம் நிறைந்தவன் இவற்றைக் கண்டு பிடிக்கட்டும், புத்தியுள்ளவன் இவற்றை அறிந்து கொள்ளட்டும்@ ஏனெனில் ஆண்டவரின் வழிகள் நேர்மையானவை, நேர்மையானவர்கள் அவற்றில் நடக்கிறார்கள்@ மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகிறார்கள்.