அதிகாரம் 10
2 யாப்பேத்தின் மக்கள்: கோமேர், மகோக், மதாயி, யாவான், துபால், மோசோக், திராஸ் என்பவர்கள்.
3 ஆசெனேஸ், ரிப்பாத், தொகொர்மா ஆகியோர் கோமேருடைய மக்கள். யாவானுடைய புதல்வர்கள்:
4 எலிசா, தற்சிஸ், சேத்தீம், தொதானீம் என்பவர்கள்.
5 இவர்களால் தான் உலக மக்களுடைய நாடுகளும் தீவுகளும் அவரவர்க்குரிய மொழிக்கும் இனத்திற்கும் தக்கபடி பகுக்கப்பட்டன.
6 காமின் மக்கள்: கூஸ், மெஸ்றாயீம், புத், கானான் என்பவர்கள்.
7 சாபா, ஏவிலா, சபத்தா, இரேக்மா, சபத்தக்கா ஆகியோர் கூஸின் புதல்வர். சபாவும், ததானும் இரேக்மாவின் மக்கள்.
8 பின் கூஸ் நெமிரோதைப் பெற்றான். இவன் பூமியிலே வலிமை மிக்கவனாய் இருந்தான்.
9 ஆண்டவருக்கு முன் அவன் வலிமை மிக்க வேட்டைக்காரனாய் இருந்தான். ஆதலால் தான் ~ஆண்டவருக்கு முன்பாக நெமிரோதைப் போல் வலிமை மிக்க வேட்டைக்காரன்~ என்னும் பழமொழி வழங்கலாயிற்று.
10 சென்னார் நாட்டிலுள்ள பாபிலோன், ஆராக், ஆக்காத், காலன்னே (என்னும் நகரங்கள்) அவன் அரசாட்சியின் முதல் இடங்களாய் அமைந்தன.
11 அந்நாட்டிலிருந்து ஆசூர் தோன்றி நினிவே நகரையும், அந்நகரின் விதிகளையும், பின் காலேயையும் அமைத்தான்.
12 நினிவேய்க்கும் காலேய்க்கும் நடுவே இறேசெனையும் எழுப்பினான். இது பெரிய நகர்.
13 மெஸ்றாயீம் முதலில் லுதீம் என்பவனையும், பிறகு அனமீம், லாபீம், நெப்துயீம், பெத்திருசீம், கஸ்லுயீம் என்பவர்களையும் பெற்றான்.
14 இவர்களிடமிருந்து பிலிஸ்தியரும் கப்தோரீமரும் தோன்றினார்கள்.
15 கானான் தன் தலைச்சனாகிய சிதோனைப் பெற்றான்@
16 பிறகு ஏத்தை, யெபூசை, அமோறை, யெற்கேசை, ஏவை, அரக்கை,
17 சீனை, அரதியை, சமறை, அமத்தைப் பெற்றான்.
18 இவர்களால் கானானியர்களின் வம்சங்கள் பல நாடுகளில் பரவின.
19 சீதோன் முதல் ஜெரரா வழியாகக் காஜா வரையிலும், சொதோம், கொமோரா, ஆதமா செபொயீம், என்னும் நகரங்கள் முதல் லெசா வரையிலுமுள்ள நாடு கானானியரின் எல்லைகளாம்.
20 தங்கள் உறவினர், மொழி, சந்ததி, நாடு, இனம் ஆகியவற்றின்படி இவர்களே காமுடைய வழித் தோன்றல்களாவர்.
21 சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தனர். அவன் ஏபேரின் சந்ததியாருக்குக்கெல்லாம் தந்தையும் யாப்பேத்தின் அண்ணனும் ஆவான்.
22 சேமின் புதல்வர்: ஐலாம் ஆசூர், அற்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.
23 ஊஸ், ஊள், ஜெத்தோமேஸ், என்பவர்கள் ஆராமின் புதல்வர்.
24 அற்பக்சாத் சாலே என்பவனைப் பெற்றான்.
25 இவனுக்கு ஏபேர் பிறந்தான். ஏபேருக்கு இரண்டு புதல்வர் பிறந்தனர். ஒருவன் பெயர் பாலேக்@ ஏனென்றால் இவன் காலத்தில் பூமி பிரிக்கப்பட்டது. இவன் தம்பி பெயர் ஜெக்தான்.
26 இந்த ஜெக்தான் எல்மோதாதைப் பெற்று, பிறகு சாலேப்,
27 ஆசர்மோத், ஜாரே, அதுராம், உசால்,
28 தெக்கிலா, எபால், அபிமயேல், சபா,
29 ஒப்பீர், ஏவிலா, ஜொபாப் என்பவர்களையும் ( பெற்றான் ). இவர்கள் யாவரும் ஜெக்தானின் புதல்வர்கள்.
30 மெசா முதல் கீழ்த்திசையிலுள்ள செப்பார் மலை வரை இவர்களுடைய உறைவிடம்.
31 தங்கள் உறவினர், மொழி, நாடு ,இனம் ஆகியவற்றின்படி இவர்களே சேமுடைய வழித்தோன்றல்கள்.
32 தத்தம் இனம், நாடு முதலியவற்றின்படி இவர்களே நோவாவின் குடும்பத்தார். வெள்ளப் பெருக்கிற்குப் பின் இவர்களாலேயே பூமியில் மக்கள் உண்டாயினர்.