அதிகாரம் 11
2 மகா அர்தக்சேர்செஸ் ஆட்சியின் இரண்டாம் ஆண்டில் நீசான் மாதம் முதல் நாள் பென்யமீன் குலத்திலே சீசின் புதல்வன் செமேயிக்குப் பிறந்த யாயீருடைய மகன் மார்தொக்கே ஒரு கனவு கண்டார்.
3 அவர் சூசா நகரில் குடியிருந்த ஒரு யூதர்@ பெரியவர்@ அரண்மனை அலுவலருள் முதல்வர்.
4 பபிலோனிய அரசனான நபுக்கோதனசாரால் யூதாவின் அரசனான எக்கோனியாசுடன் சிறைப்படுத்தப் பட்டவருள் அவரும் ஒருவர்.
5 அவர் கண்ட கனவாவது: பேரிரைச்சலும் கலகமும் இடிமுழக்கமும் நிலநடுக்கமும் பூமியிலே குழப்பமும் ஏற்பட்டன.
6 அப்போது இரண்டு பறவை நாகங்கள் தோன்றின. அவை ஒன்றையொன்று எதிர்க்கத் தயாராய் நின்றன.
7 அவற்றின் இரைச்சலைக் கேட்டு எல்லா மக்களும் நீதிமான்களின் குலத்தை எதிர்த்துப் போராட எழுந்தனர்.
8 அந்நாளில் நிலமெங்கணும் இருளும் ஆபத்தும் துன்ப துயரமும் பேரச்சமும் நிலவின.
9 நீதிமான்களின் குலத்தாரோ தங்களுக்கு நேரிடவிருந்த தீமைகளைக் கண்டு அஞ்சி, சாகத் தயாராயினர்.
10 ஆதலால் அவர்கள் கடவுளை நோக்கி அபயமிட்டார்கள். உடனே சிறியதோர் ஊற்று பெரிய ஆறாகப் பெருகிப் பெருவெள்ளமாக வழிந்தோடிற்று.
11 (அந்நேரத்தில்) சூரியன் உதயமாகவே ஒளி உண்டாயிற்று. (அப்பொழுது) தாழ்ந்தோர் மேன்மையுற்று உயர்ந்தோரை விழுங்கினர்.
12 மார்தொக்கே இந்தக் காட்சியைக் கண்டு படுக்கையினின்று எழுந்த பின்பு, கடவுள் செய்யவிருந்ததைப் பற்றி ஆலோசிக்கலானார்@ இக்கனவிற்குப் பொருள் அறிய விரும்பி, அதைத் தம் மனத்தில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டார்.