நூர்ஜஹான் ஜன்டா என்ற ஒரு ஆதரவாளர் குழுவை அமைத்துக் கொண்டு செயல்பட்டதாகவும், இதனால் முகலாய அரசவையில் இரண்டு கோஷ்டிகள் உருவானதாகவும் சிலவரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஐஹாங்கீர் முற்றிலும் தனது மனைவி நூர்ஐஹானின் கட்டுப்பாட்டில் இருந்து செயல்பட்டதால்தான் 1622ல் ஹாஜகான் தனது தந்தைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த கருத்துக்கு பிற வரலாற்று அறிஞர்கள் உடன்படுவதில்லை. ஜஹாங்கீர் நோய்வாய்ப்பட்டு வலிமை குன்றும் காலம்வரை அவரே அனைத்து அரசியல் முடிவுகளையும் எடுத்து வந்தார் என்பதை அவரது சுயசரிதம் வெளிப்படுத்துகிறது.
ஐஹாங்கீர் கல்லறை
இருப்பினும், நூர்ஜஹான் அரச குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். பாரசீக பண்பாட்டு முறைகளைக் கொண்டுவந்தார். அரசவையில் பாரசீகக்கலையும் பண்பாடும் அவரால் ஊக்குவிக்கப்பட்டன. ஜஹாங்கீருடன் நெருங்கிய உறவை எப்போதும் அவர் கொண்டிருந்தார். வேட்டையின்போது கூட அவருடனேயே செல்வது வழக்கம். ஷாஜகானின் எழுச்சி அவரது தனிப்பட்ட ஆவலால் தூண்டப்பட்டதாகும். தம்மை காண்டாஹாருக்கு செல்லுமாறு பணித்த தந்தையை எதிர்த்து அவர் கிளர்ச்சியில் இறங்கினார். அக்கிளர்ச்சியால் முகலாயப்பேரரசின் நடவடிக்கைகள் நான்காண்டுகள் திசைமாறின. 1627ல் ஜஹாங்கீர் மறைந்த பிறகு, உயர்குடியினர் மற்றும் ராணுவத்தின் ஆதரவைப்பெற்று ஹாஜகான் ஆக்ராவை அடைந்தார். நூர்ஜஹானுக்கு ஓய்வூதியம் அளிக்கப்பட்டது. அடுத்த பதினெட்டு ஆண்டுகள் நூர்ஜஹான் உயிர்வாழ்ந்தார்.
ஷாஜகான்
ஷாஜகான் (1627 - 1658)
காண்டஹார் மற்றும் பிற பூர்வீகப் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ஷாஜகான் வடமேற்கு எல்லைப்பகுதியில் தொடர்ந்து படையெடுப்புகளை நடத்தினார். 1639 முதல் 1647 வரை நடைபெற்ற தொடர் படையெடுப்புகளினால் 5000 முகலாய வீரார்கள் மடிந்தனர். பின்னர் ஷாஜகான் தனது எண்ணத்தை கைவிட்டு அங்கு போரிடுவதை நிறுத்தினார்.
அவரது தக்காணக் கொள்கை வெற்றிகளைத் தேடித்தந்தது. அகமது நகரை முறியடித்து முகலாயப் பேரரசுடன் இணைத்துக் கொண்டார். பீஜப்பூரும், கோல்கொண்டாவும் பேரரசரோடு ஒப்பந்தம் செய்து கொண்டன. காந்தேஷ், பீகார், தெலுங்கானா, தௌலதாபாத் என்ற நான்கு மகாணங்களை ஷாஜகான் தக்காணத்தில் உருவாக்கினார். அவற்றை தமது மகன் அவுரங்கசீப்பின் கட்டுப்பாட்டில் விட்டார்.