இது மனைவியாயினும் சரி. மகேஸ்வரனாயினும் சரி!
எது பிடிக்கவில்லையோ அதில் இருந்து ஒதுங்கி நில். ஆனால், தினமும் சந்தேகப்பட்டு உடம்பையும் மனத்தையும் கெடுத்துக் கொள்ளாதே.
சாப்பிட்டு முடிந்த பின், எதைச் சாப்பிட்டோமோ என்று நினைத்தால், அடிவயிற்றைக் கலக்கும்.
சாப்பிடுவதற்கு முன்னாலேயே நன்றாகப் பார்.
கல்யாணம் கட்டி சாந்தி முகூர்த்தம் முடிந்த பின் `இதையா கட்டிக் கொண்டோம்’ என்று நினைத்தால் நிம்மதி அடியோடு போய்விடும்.
முன்னாலே யோசி.
யோசித்துச் செய்த முடிவுகளில் நம்பிக்கை வை.
திருப்பதிக்குப் போவது என்று முடிவு கட்டினால் திரும்பி வரும்போது பலன் இருக்கும் என்று நம்பு.
நம்பிக்கையும் சந்தேகமும் மாறி மாறி ஊடாடினால், அப்போதும் நிம்மதி இருக்காது.
மீன் கூடைக்குப் பக்கத்தில் பூக்கூடையை வைத்தால் மீன் வாசமும் தெரியாது; பூ வாசமும் தெரியாது. கலப்படமான ஒரு அருவருப்பே தோன்றும்.
நண்பன் தீயவன் என்றால், விலகிவிடு; நல்லவன் என்றால் நம்பிவிடு.
விலக்கியவனை நம்பத் தொடங்காதே; நம்பியவனை விலக்கத் தொடங்காதே.